ஈரானின் உச்சத் தலைவர் அலி அயத்துல்லா கமேனி (Ali Khamenei) உயிரிழந்ததாக கூறப்படும் பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump), வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமேனியின் மறைவுக்குப் பிறகு, தன்னை ஈரானின் தலைவராக பொறுப்பேற்க அழைப்பு வந்ததாகவும், அதை தாம் நிராகரித்துவிட்டதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்ற அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பலனின்றி முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடுமையான தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த தாக்குதலில் அலி அயத்துல்லா கமேனி (Ali Khamenei),அவரது குடும்பத்தினர் மற்றும் பல ராணுவ உயரதிகாரிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் அதன் கூட்டணி பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், ஈரானின் முக்கிய ராணுவ அதிகாரிகளும் பலர் தாக்குதல்களில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீங்களே தனியா பேசிக்கிறீங்க போலயே! அமெரிக்காவை கிண்டல் செய்யு ஈரான்! பேச்சுவார்த்தை மறுப்பு!

அலி அயத்துல்லா கமேனி (Ali Khamenei) மறைவுக்குப் பின்னர், அவரது மகன் மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தலைமையில் ஈரான் ராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தந்தையின் மரணத்திற்கு அமெரிக்காவிடம் பழிவாங்குவோம் என மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) உறுதி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய டொனால்டு ட்ரம்ப் (Donald Trump), “ஈரானின் அடுத்த தலைவராக நான் பொறுப்பேற்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால் நான் அதை மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) உடல்நிலை குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. தாக்குதலில் காயமடைந்த அவர் ஒரு காலை இழந்ததாகவும், தற்போது தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை அவர் பொதுமக்கள் முன் தோன்றாததும் கவனிக்கப்படுகிறது.
ஈரானில் உருவாகியுள்ள அதிகார வெற்றிடத்தின் மத்தியில், டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) வெளியிட்ட இந்த கருத்து உலகளவில் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பாக்., அழுத்தத்திற்கு பணிந்ததா ஈரான்?! காஷ்மீர் விவகாரம்!! இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த பதிவுகள் அழிப்பு!!