அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டவர்களின் பல்வேறு உரிமைகள், சலுகைகள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் விசா முடிந்தும் வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள் என இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்த்ருந்தது. இதன்படி விசா காலத்தை விட அதிகமாக தங்கியிருப்பது நாடுகடத்தலுக்கும், விசா முடிந்தும் வெளியேறாத இந்தியர்களுக்கு மீண்டும் அமெரிக்காவுக்கு வர நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் பெருமளவிலான நாடுகடத்தல் சர்ச்சைக்கு மத்தியில், கல்லூரி வகுப்புகளைத் தவிர்ப்பது அல்லது அவர்களின் திட்டங்களை விட்டு வெளியேறுவது தொடர்பாக, இந்திய மற்றும் பிற வெளிநாட்டு மாணவர்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது.அமெரிக்க கல்வி நிலையங்களில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.அவர்களால் சுமார் 69 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக அமெரிக்க அரசே கணக்கிட்டு சொல்லி இருக்கிறது.
இதையும் படிங்க: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியா கொடுத்த மரண அடியால் பம்மும் பாக்.,
டிரம்ப் அதிபராக பதவி ஏற்றது முதல் அமெரிக்காவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் அச்சத்திலேயே உள்ளனர். விசா தொடர்பான அவரது கெடுபிடி அறிவிப்புகளால் தொடர்ந்து அமெரிக்காவில் படிக்க முடியுமா என்ற கேள்விகள் அவர்களுக்கு எழுந்திருக்கிறது. இந்நிலையில் டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்காக ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

இந்திய மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால், வகுப்புகளை தவிர்த்தால் அல்லது கல்வி நிலையத்துக்கு தெரிவிக்காமல் படிப்பைவிட்டு வெளியேறினால் உங்களுடைய விசா ரத்து செய்யப்படலாம். மேலும் எதிர்காலத்தில் நீங்கள் அமெரிக்க விசா பெறும் தகுதியையும் இழக்க நேரிடும். எப்போதும் விசா விதிமுறைகளைப் பின்பற்றி, உங்களுடைய மாணவர் அந்தஸ்தை பாதுகாத்துக்கொள்ளவும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் சட்டத்துக்கு புறம்பாக வசிக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கட்டாயமாக அவர்களுடைய நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தியர்களும் அதில் இடம் பெற்று இருந்தனர்.அந்த நடவடிக்கைக்கு பிறகு இப்போது இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா விசா தொடர்பாக கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
இதையும் படிங்க: புடினுக்கு பைத்தியம் பிடித்து விட்டது..! கோபத்தில் கொந்தளிக்கும் ட்ரம்ப்.. 3ம் உலகப்போருக்கு அடிபோடுகிறதா அமெரிக்கா..!