“ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 2 மணி நேரம் முன்தான் நான் அந்த விமானத்தில் பயணித்தேன். வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன் என பயணி ஒருவர் பதிவிட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்திலிருந்து மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது. இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டினர், 1 கனேடிய நாட்டினர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர். விமானம் வானில் பறக்கத் தொடங்கிய 3வது நிமிடத்திலேயே அகமதாபாத்தினுடைய மேக்காணி என்று சொல்லக்கூடிய நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்னதாக ஆகாஷ் வத்சா என்பவர் டெல்லியில் இருந்து அகமதாபாத்திற்கு பயணித்துள்ளார். வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து X தளத்திலும் பகிர்ந்தேன் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 23 நொடியில் எல்லாம் முடிஞ்சுது….விமான விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நபர் அதிர்ச்சி தகவல்!

விமானத்தின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோக்களையும் பகிர்ந்துள்ள அவர், விமானத்தின் உள்ளே ஏர் கண்டிஷனிங் மற்றும் விமானத்திற்குள் பொழுதுபோக்கு அமைப்பு வேலை செய்யவில்லை எனக்கூறியுள்ளார். அந்த வீடியோவில், “நாங்கள் விமானத்திற்குள் ஏறப்போகிறோம். ஆனால் ஏசி வேலை செய்யவில்லை. எல்லோரையும் பாருங்கள். வழக்கம் போல், டிவி திரைகளும் வேலை செய்யவில்லை. விளக்குகள் கூட சரியாக இல்லை. இதுதான் எங்களுக்கு வழங்கும் சேவையா? என பேசியுள்ளார்.

இந்த வீடியோவை ஏர் இந்தியாவிற்கு டேக் செய்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது நடந்து சரியாக 2 மணி நேரத்திற்கு பிறகு அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட அதேவிமானம் சில விநாடிகளிலேயே தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியெடுத்துள்ளது.
இதையும் படிங்க: 2026ல் கூட்டணி பாஜக ஆட்சிதான்... குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை!!