ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு மேற்கு வங்கத்திற்கு தனது முதல் பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொண்டார். அவர் மேற்கு வங்கத்திற்கு இரண்டு நாள் பயணமாக கொல்கத்தாவுக்கு சனிக்கிழமை வந்தார். கொல்கத்தாவின் புறநகரில் உள்ள ராஜர்ஹாட்டில் மத்திய தடயவியல் அறிவியல் ஆய்வகத்தை (CFSL) திறந்து வைத்தார். பின்னர், நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் கட்சி மாநாட்டில் பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே ஷா உரையாற்றினார்.

அமித் ஷா பேசியதாவது, வக்ப் சட்டத்தில் ஏதேனும் தவறு இருக்கிறதா? வக்ப் சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் முதல்வர் மம்தா யாருக்கு சாதகமாக செயல்படுகிறார். 2026 வரை அவர் வக்ப் சட்டத்தை எதிர்க்கலாம் அதன் பின் அவர் முதல்வராக இருக்க மாட்டார். வக்ப் சட்டத்துக்கு எதிராக முர்ஷிதாபாத்தில் கலவரம் நடந்தபோது, பாதுகாப்புக்கு சிஆர்பிஎப் படையை ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் சொன்னபோதும், மம்தா அழைக்கவில்லை. கோர்ட் உத்தரவுக்கு பிறகுதான் சிஆர்பிஎப் படையினர் வந்து இந்துக்களை பாதுகாத்தனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த கொலை மிரட்டல்.. பீகார் இளைஞரின் சதித்திட்டம் அம்பலம்..!
வங்க தேச அமைச்சர்களுக்கும் கலவரங்களில் தொடர்பு இருக்கிறது. இது அரசு ஆதரவுடன் நடந்த கலவரம். இந்துக்களுக்குஅநீதி இழைக்கப்பட்டது. முஸ்லிம்களை திருப்பதிப்படுத்த அனைத்து வரம்பகளையும் முதல்வர் மம்தா மீறிவிட்டார். வங்கதேசத்தினர் ஊடுருவல் மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்களின் பூமியாக மேற்கு வங்கத்தை முதல்வர் மம்தா மாற்றி விட்டார். அவரது ஆட்சியில் நூற்றுக்கணக்கான பாஜவினர் கொல்லப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் ஊடுருவலை தடுக்க வங்கதேசத்துடனான சர்வதேச எல்லையில் வேலி அமைக்க மாநில அரசு இடம் தர மறுக்கிறது. வங்கதேசத்தினருக்காக எல்லைகளை மம்தா திறந்து விட்டுள்ளார். பாஜ ஆட்சிக்கு வரும்போது, அது தடுக்கப்படும். வாக்கு வங்கிக்காக மம்தா திருப்பதிப்படுத்தும் அரசியல் செய்கிறார்.. ஆபரேஷன் சிந்தூரை எதிர்த்ததன் மூலம் கோடிக்கணக்கான பெண்களின் உணர்ச்சிகளுடன் முதல்வர் விளையாடிவிட்டார். மேற்கு வங்கத்தின் சகோதரிகள் தாய்மார்கள் அவருக்கு பாடம் கற்பிப்பார்கள்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு மம்தா எவ்வளவு வேண்டுமானாலும் ஆதரவு அளிக்கலாம் ஆனால், இது மோடியின் அரசு; ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை; எவருக்கேனும் துணிச்சல் இருந்தால் தக்க பதிலடி தரப்படும் என்று அமித் ஷா கூறினார்.

இந்த நிலையில் அமித் ஷாவின் அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில், பாகிஸ்தானில் நடந்த தாக்குதல்கள் குறித்து வெளிநாடுகளில் உள்ள அரசாங்கங்களை மதிப்பிடுவதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட பல கட்சி எம்.பி.க்கள் குழுவில் டி.எம்.சி தலைவர் அபிஷேக் பானர்ஜி இருக்கும் நேரத்தில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் அவர் அரசியல் விளையாடுவதாக டி.எம்.சி குற்றம் சாட்டியது.
உள்துறை அமைச்சர் வங்காளத்திற்கு வந்து பாஜக தொண்டர் போல நடந்து கொள்கிறார். நமது முதல்வருக்கு எதிராக மலிவான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். எந்த எதிர்க்கட்சித் தலைவராவது இப்படிப் பேச அனுமதிப்பாரா? பிரிவினைதான் அவரது அரசியல். அவர் ஊடுருவல் பற்றிப் பேசுகிறார், பஹல்காமில் ஊடுருவல் எப்படி நடந்தது என்று சொல்ல முடியுமா? அவர் உள்துறை அமைச்சராகத் தோல்வியடைந்துவிட்டார், ராஜினாமா செய்ய வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஷ் கூறினார்.
உள்துறை அமைச்சர் அனைத்து தோல்விகளுக்கும் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். நாங்கள் ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராகப் பேசியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார், ஆனால் ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக நாங்கள் எதுவும் கூறவில்லை என்று மாநில அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா கூறினார்.
இதையும் படிங்க: வாய் விட்டு மாட்டிக்கொண்ட ராகுல்.. கோர்ட் பிறப்பித்த பிடிவாரண்ட்.. மீண்டும் சிக்கல்..!