பீகார் மாநில அரசியலில் கடந்த இரண்டு தசாப்தங்களாக நீடித்து வந்த ஒரு சகாப்தம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. பீகாரில் சுமார் 21 ஆண்டுகளாக முதலமைச்சராகப் பணியாற்றி வந்த நிதிஷ் குமார், தனது பதவியை நேற்று முறைப்படி ராஜினாமா செய்தார். இதன் மூலம் அம்மாநிலத்தில் முதல் முறையாகப் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ளார்.
சமீபத்தில் மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்ட நிதிஷ் குமார், தனது முதலமைச்சர் பதவியைத் துறக்க முடிவு செய்தார். நேற்று பீகார் ஆளுநரைச் சந்தித்த நிதிஷ் குமார், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனுடன் பீகாரில் நீண்டகாலமாகத் தொடர்ந்த அவரது சுழற்சி முறை அரசியல் பயணம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
பாஜகவின் பீகார் மாநிலத் தலைவராகவும், தற்போது துணை முதலமைச்சராகவும் பதவி வகித்து வரும் சாம்ராட் சௌத்ரி, பீகாரின் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில வரலாற்றிலேயே பாஜகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆவது இதுவே முதல் முறையாகும். அரசியல் அழுத்தங்களுக்குப் பின், பாஜக தனது நீண்டநாள் இலக்கான பீகார் முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிங்க: பீகாரில் சோக சம்பவம்: அம்மன் கோவிலில் கடும் கூட்ட நெரிசல்..!! 8 பெண் பக்தர்கள் பரிதாப பலி..!!
புதிய முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அமைச்சரவை இன்று முறைப்படி பதவி ஏற்றார். இந்த விழாவில் பாஜகவின் தேசியத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். நிதிஷ் குமார் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய அமைச்சரவைக் கலைப்பு மற்றும் பதவியேற்புக்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வந்தது. இன்று பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது.
நிதிஷ் குமார் தேசிய அரசியலில் அதிகக் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாலேயே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், பீகாரில் வலுவான அடித்தளம் கொண்டுள்ள ஜேடியு (IDU) மற்றும் பாஜக கூட்டணியில் சாம்ராட் சௌத்ரியின் தலைமை எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் நாட்களில் தெரியவரும். பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றமானது, வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல் 2026: 26 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு..!! பீகார், ஒடிசா, அரியானாவில் மட்டும் போட்டி..!!