சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பிரத்யேக மீன்பிடித் துறைமுகம் திருவொற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 2,000 மீனவர்களுக்கு ரூ. 242 கோடியில் நுண்கடன், பாக் நீரிணைப்பு மீனவர்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். அதை தொடர்ந்து ராமநாதபுரம் தங்கச்சிமடம், ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மீன் இறங்கு தளங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடர்ந்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பின்னர் பேசிய அவர், விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வழங்கும் தொகை ரூ. 8 லட்சமாக உயர்த்தப்படும். புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அரசு மீன் பண்ணைகளை மேம்படுத்த ரூ. 46 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரண தொகை ரூ.5000-லிருந்து ரூ.8000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலிவு அரசியல் தவிடுபொடியானது! அண்ணா பல்கலை. வழக்கின் தீர்ப்பை வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்...

1 லட்சத்து 20 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.1,528 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாம் எடுத்த நடவடிக்கைகளால் இதுவரை 1,154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு மீட்கப்பட்டனர். இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளேன்.

தொடர் வலியுறுத்தல் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி. கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினோம். தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனால்தான் கச்சத்தீவை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! முதல்வர் ஸ்டாலின் உறுதி...