புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இந்த நலத் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதி அரசிடம் இல்லாததால், அரசின் வருவாயை பெருக்க வேண்டிய கட்டாய சூழல் எழுந்துள்ளது.

இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதுவை மக்களுக்கு சுமையின்றி, அரசின் வருவாயை பெருக்க முடிவு ஒன்று எடுக்கப்பட்டது. அதையடுத்து மது வகைகளுக்கு கலால் வரி, மதுக் கடைகளுக்கு உரிம கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, ஆகியவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. புதுச்சேரியில் உயர்கிறது மது விலை.. எந்த பாட்டிலுக்கு எவ்வளவு விலை ஏற்றம்?

அதன்படி புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்வு கடந்த மே 28ஆம் தேதி அமலுக்கு வந்தது. பீருக்கு ரூபாய் 10 வரையிலும், குவார்ட்டர் மது பாட்டில் ரூ.6 முதல் ரூ.30 வரையும் விலை உயர்ந்துள்ளது. 750 மிலி கொண்ட முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்கிறது. புதுச்சேரியில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மதுக்கடை உரிமத்திற்கான ஆண்டு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்த கொள்முதல் கடைகளுக்கான உரிமத்திற்கு ஆண்டு லைசன்ஸ் கட்டணம் ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாகவும், சில்லறைக் கடைகளுக்கான ஆண்டு லைசன்ஸ் கட்டணம் ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.14 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சுற்றுலா பிரிவின் கீழ் உணவகங்களில் செயல்படும் மது கூடங்களுக்கான ஆண்டு லைசன்ஸ் கட்டணம் ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கலால்துறை மூலம் ரூ.275 கோடி கூடுதல் வருவாய் ஈட்டுவதற்காக இத்தகைய கட்டண உயர்வு முடிவுகளை புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் பயமுறுத்தும் கொரோனா.. முகக் கவசம் அணிவது கட்டாயம்.? ஹெல்த் மினிஸ்டர் முக்கிய அப்டேட்.!!