மேற்குவங்க மாநிலம் காளிகஞ்ச் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது வெடிகுண்டு வெடித்ததில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அலிஃபா கணிசமான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தபோது, பரோசந்த்கர் கிராமத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 4 ஆம் வகுப்பு மாணவி தமன்னா கதுன் உயிரிழந்தார். இதனால் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #ELECTION: நிலம்பூர் தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி... 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாஜக..!

திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள அலிஃபா அகமது சிறுமி உயிரிழப்பு தொடர்பாக பேசினார். வாக்கு எண்ணும் மையத்தில் தான் இருந்தபோது தொலைபேசி தன்னிடம் இல்லை என்றும் இந்த சம்பவம் குறித்து முதல் முறையாக நான் ஊடகங்களுடன் உரையாடியபோதுதான் அறிந்ததாகவும் கூறினார்.

இச்சம்பவத்தால் தான் வெட்கப்படுகிறேன் என தெரிவித்த அவர், இதுபோல நடந்திருக்கக்கூடாது என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க: ஜூன் 19ல் இடைத்தேர்தல்.. தொகுதிகளை பட்டியலிட்டு வெளியிட்டது தேர்தல் ஆணையம்!!