உலக வங்கி சார்பில் சென்னை தரமணியில் நவீன உலகளாவிய வணிக மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வணிக மையம் சர்வதேச வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் புதுமையான திட்டங்களை ஊக்குவிப்பதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், TIDCO மற்றும் DLF நிறுவனங்கள் இணைந்து தரமணியில் 27.04 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.5000 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்காக நவீன வளாகம் அமைக்கும் திட்டத்தை 2020 இல் அறிவித்தன. இதன் மூலம் 70,000 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் தலைமையில் துறைசார் ஆய்வுக்கூட்டம்! அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை..!
இந்த நவீன உலகளாவிய வணிக மையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 1971 ஆம் ஆண்டு உலக வங்கியுடன் தமிழ்நாட்டிற்கான உறவு தொடங்கியது. பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் 8,400 நிறுவனங்களுக்கு 267 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தோழி விடுதிகள் திட்டத்திலும் உலகமெங்கும் பங்களிப்பு உள்ளது என தெரிவித்தார். இந்தியாவுக்கே தமிழ்நாடு லீடர் என்ற நிலையை அடைந்திருப்பதாக பெருமிதம் கூறினார்.

உலக வங்கியின் உதவியால் தமிழ்நாட்டில் வேளாண்துறை மேம்பட்டு வருகிறது. 2023 கணக்கெடுப்பின்படி 63 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். மகளிர் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு திட்டம் உலக வங்கி உதவி உடன் செயல்படுத்தப்படும் என கூறினார்.
இதையும் படிங்க: வாக்குறுதி பட்டியலை வைத்து விவாதிக்க தயாரா? ஸ்டாலினுக்கு அமித்ஷா ஓபன் சேலஞ்ச்..!