கடந்த நான்காம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்கள் தேர்வு எழுதினர். அன்றைய தினம் கன மழை காரணமாக பிற்பகல் 2 மணி முதல் 4:15 மணி வரை மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக்கு ஒரு மறு தேர்வு நடத்த 13 மாணவர்கள் சிலை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீட் மறுதேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.
இதையும் படிங்க: நீட் தேர்வு குறித்த சர்ச்சை கருத்து... விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த கிருஷ்ணசாமி!!

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய கூறி வழக்கை ஒத்திவைத்தனர். அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: அம்பலமான விஜயின் ஆர்.ஆர்.எஸ். அஜெண்ட்டா.. வீடியோ ஆதாரத்துடன் பொளந்தெடுக்கும் திமுக..!