கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்பொழுது அதிகரித்து வருகின்றது. இதனால் அதிகமான மக்கள் பாதிப்படைந்து அம் மாநில மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகள் வீடுகளில் சிகிச்சையில் இருக்கின்றனர். இதையடுத்து அருகில் இருக்கக்கூடிய தமிழகத்திற்கு இதே போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இன்று நெல்லை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உயர் அதிகாரிகள் உத்தரவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவோர்களுக்கான தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் 10 படுக்கை வசதிகள் கூடிய அருகிலேயே ஆக்சிசன் வசதிகளும் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமா?... அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
நெல்லை மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் அனுமதி ஆகவில்லை.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா ஐசோலேசன் தனி வார்டுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளால் அரசு மருத்துவமனைக்கு வரும் பொது மக்களையும் பரிசோதனையும் செய்து வருவதாகவும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேகமெடுக்கும் உருமாறிய கொரோனா.. முகக்கவசம் கட்டாயமா? - அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு..!