மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது, இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு மீது பல வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இஸ்ரேலின் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்று பெயரிடப்பட்ட இந்த திட்டம் ஈரானின் அணு ஆயுதத் திறனை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இலக்கு வைத்து நடத்தப்பட்டவை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 10வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது. ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகளை சுமந்து சென்று, ஈரானின் அணு கூடங்கள், ராணுவ தளங்கள், ராணுவ அதிகாரிகளின் இருப்பிடங்களை தேடி கண்டுபிடித்து இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டு வீசி வருகின்றன.
இதையும் படிங்க: கொதித்தெழுந்த ஈரான்.. இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்.. 16 பேர் காயம்..!

பதிலுக்கு தரையில் இருந்து பறந்து சென்று தரைப்பகுதியை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த க்ரூஸ், பாலிஸ்டிக், ஹைபர் சோனிக் ஏவுகணை ரகங்களை வைத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்கி வருகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஈரானில் 300 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இஸ்ரேலுக்கு இவ்வளவு இழப்பு இல்லை. ஈரானோடு ஒப்பிடும் போது இஸ்ரேல் முக்கியமான எந்த கட்டுமானங்களையும் இழக்கவில்லை.

இதுவரை 25க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இத்தனைக்கும் கொத்து கொத்தாக ட்ரோன்கள், 400க்கும் அதிகமான ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசி இருக்கிறது.
போர் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஈரானில் வசித்து வரும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவை சேர்ந்த பலர் ஈரானில் தங்கி கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாதுகாப்பு கருதி இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் 'ஆபரேஷன் சிந்து' மூலம் ஈரானில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஈரானில் கல்வி பயின்று வந்த மாணவ-மாணவியர் ஆவர். தற்போது மேலும், 280 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஈரானின் மெஹன் விமானம் மூலம் டெல்லிக்கு வந்துள்ளனர். இதில் 200க்கும் மேற்பட்டோர் ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மாணவ - மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கமேனிக்கு டார்கெட்..? தனக்கு பிறகு யார்..? 3 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்த ஈரான் தலைவர்..!