புனேவில் உள்ள மாவல் தாலுகாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் உள்ள இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில் மீட்பு பணிகள் துரித கதையில் நடைபெற்று வருகிறது. துரதிஷ்டவசமாக இந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலமான ஆற்று நீர் பாய்ச்சல் காரணமாக இரும்பு பாடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது; புனேவின் தலேகானில் உள்ள இந்திராயானி ஆற்றில் பாலம் இடிந்து விழுந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். மகாராஷ்டிரா முதல்வர் ஸ்ரீ தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பேசி, தற்போதைய நிலவரத்தைப் பற்றி விசாரித்தேன். அருகில் நிறுத்தப்பட்டிருந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க அளவில் உடனடி நடவடிக்கை எடுத்து பல உயிர்களைக் காப்பாற்றினர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு மனமார்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அமித் ஷா கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விஜய் ரூபானி ஒரு MAGIC… அவர் இல்லன்னு நெனச்சுக்கூட பார்க்க முடியல! அமித்ஷா உருக்கம்!