ஏடிஎம்களில் இருந்து குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைப் பெறுவது பெரும்பாலும் ஒரு போராட்டமாகவே இருந்து வருகிறது. ஏடிஎம்மில் 500 அல்லது 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே விநியோகிக்கப்படுவதால் ஏற்படும் விரக்தியை நம்மில் பலர் அனுபவித்திருப்போம். இதனால் சில்லறைக்காக படாதபாடு வேண்டியதாக உள்ளது. தற்போது வாடிக்கையாளர்களின் இந்த கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான, நல்ல செய்தியை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது.

ஆர்பிஐ அதிரடி உத்தரவு:
அதாவது அனைத்து வங்கிகளும் ஏடிஎம்களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டிலிருந்து ரூ.100 அல்லது ரூ.200 நோட்டுகளை விநியோகிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது அனைவரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வந்தாலும், மக்களுக்கு இன்னும் பணம் தேவைப்படுகிறது. ஆனால் தேவைப்படும்போது பணம் கிடைக்காததால் அவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முக்கிய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. சந்தையில் பணப் பற்றாக்குறை அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில், ஏடிஎம்களில் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வங்கி ATM களில் பணம் எடுத்தால் இது நடக்கும்.. இந்தியன் பேங்க் அறிவிப்பால் அதிர்ச்சி..!
வங்கிகள் செய்ய வேண்டியவை :
செப்டம்பர் 30, 2025க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டில் இருந்து ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை விநியோகிக்க வேண்டும். மார்ச் 31, 2026க்குள், அனைத்து ஏடிஎம்களிலும் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசட்டில் இருந்து ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை விநியோகிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி ரூ. 200 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது தெரிந்ததே. அதன் பிறகு ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்துவிட்டாலும், சந்தையில் ரூபாய் நோட்டுகளுக்கான தேவை இன்னும் உள்ளது.

வங்கிகள் இந்த விதிகளைப் பின்பற்றுகின்றனவா என்பதை உறுதிசெய்ய, ரிசர்வ் வங்கி உன்னிப்பாகக் கண்காணிக்கவுள்ளது. வங்கிகள் மாதாந்திர அறிக்கைகளை அனுப்ப வேண்டும், அவற்றின் ஏடிஎம்களை சரிபார்க்க வேண்டும், மேலும் விதிகளைப் பின்பற்றாத ஏடிஎம்களை விரைவாக சரிசெய்ய வேண்டும், குறிப்பாக அதிக மக்கள் உள்ள பகுதிகள் அல்லது குறைவான சேவை பெறும் பகுதிகளிலும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவை பூர்த்தி செய்யாத வங்கிகள் அபராதங்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆர்பிஐ எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: ஏடிஎம்மில் கருப்பு அட்டையைச் செருகி நூதன கொள்ளை.. வசமாக சிக்கிய வடமாநில கும்பல்..!