இன்றுஅன்று சென்னையில் இருந்து சென்ற இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கையை எதிர்கொண்டது. சமீபத்திய பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து இந்திய அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். இந்தியாவில் இருந்து எச்சரிக்கை வந்ததாக காவல்துறை ஊடக செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார். அதன் பிறகு இலங்கை பாதுகாப்புப் படையினர் விமானம் தரையிறங்கியவுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

4R-ஏஎல்எஸ் விமானத்தால் இயக்கப்படும் யுஎல் -122 விமானம் இன்று காலை 11:59 மணிக்கு கொழும்பில் தரையிறங்கியது. அதன் பிறகு உள்ளூர் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது என்று இலங்கை ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த ஒரு சந்தேக நபர் குறித்து சென்னை பகுதி கட்டுப்பாட்டு மையத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: சீமானுக்கு கொலை மிரட்டல்..! உன் மனைவி தெலுங்கர் தானே? தெமுகவினர் ஆவேசம்..!

விசாரணைக்குப் பிறகே அந்த விமானம் அடுத்த கட்ட பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனம் உறுதிப்படுத்தியது. ஆனால், பாதுகாப்பு நடைமுறைகள் காரணமாக சிங்கப்பூருக்கு அந்த விமானம் செல்ல தாமதமானது. "இலங்கை விமான நிறுவனம் அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. மிக உயர்ந்த பாதுகாப்பு தரங்களைப் பராமரிப்பதில் உறுதியாக உள்ளது" என்று இலங்கை விமானத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு.. ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!