தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் புதுச்சேரி மாநிலத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம் என்றும் தமிழக வெற்றிக்கழகம் மற்றும் இரண்டு தொகுதிகளில் கூட்டணி கட்சி போட்டியிடுவதாகவும் விஜய் தெரிவித்தார். முதன்முதலாக புதுச்சேரியில் களம் காணும் தமிழக வெற்றிக்கழகம் என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம் என்று கூறினார்.
தமிழக வெற்றி கழகத்துடன் சேர்ந்து உருளையான்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிகளில் நேயம் மக்கள் கழகம் கட்சிக் கூட்டணி வைத்து போட்டு இடுவதாகவும் அவர்களுக்கும் வாக்களியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

புதுச்சேரியில் போட்டிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று விஜய் கேட்டுக் கொண்டார் தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் திமுக காங்கிரஸின் கூட்டணி குழம்பிப்போன கூட்டனையாக உள்ளது என்று தெரிவித்தார். புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றாதது ஏன் என்ற கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: கண்ட்ரோல் இல்ல... புதுவை எல்லையில் குவிந்த TVK தொண்டர்கள்... போலீசார் தடியடி..!!
மக்கள் மீது அக்கறை இல்லாமல் ஏன் இந்த கோரிக்கையை நிறைவேற்றாமல் இருந்து வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணியும் சேர்ந்து இருக்க முடியாத நிலையில் சோர்ந்து போன கூட்டணியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். கேள்வி கேட்டால் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்று கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்த விஜய், பொருந்தாத கூட்டணிக்கு வாய்ப்பளித்து ஏமாறாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: புதுவையில் பிரச்சாரம்.. விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்... மரக்காணத்தில் பரபரப்பு..!!