புதுவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புதுச்சேரிக்கு புறப்பட்டார். இம்முறை பிரச்சாரத்துக்கு முன்னதாக, தவெக சார்பில் 23 இடங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களை முன்வைத்து புதுச்சேரி காவல்துறை 19 இடங்களுக்கு அனுமதி மறுத்தது. நான்கு இடங்களில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்ளவும் நேர கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்
இதையும் படிங்க: புதுவையில் பிரச்சாரம்.. விஜய் காரின் மீது ஏறிய தொண்டர்கள்... மரக்காணத்தில் பரபரப்பு..!!
புதுவை எல்லையில் குவிந்திருந்த தமிழக வெற்றி கழக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பிரச்சார வாகனத்தை தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் பின் தொடர்ந்து சென்றதால் விபத்துகளை தவிர்ப்பதற்காக தடியடி நடத்தியுள்ளனர். பிரச்சார வாகனத்தை செல்ல விடாமல் தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. புதுச்சேரி எல்லைக்குள் புகுந்ததும் பிரச்சார வாகனத்தில் விஜய் ஏறி நின்றார். தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் ரோடு ஷோ சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: சூடு பிடித்த அரசியல் களம்... அதிருது புதுவை... சூறாவளி பிரச்சாரத்திற்கு கிளம்பிய விஜய்..!!