• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    10 மசோதா பாணியில் நீட் தேர்வு ரத்து… உச்சநீதிமன்றத்தை நம்பி களத்தில் இறங்கும் திமுக..!

    720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண்ணை 61 பேர் பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு வந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான விசாரணை நடத்த உத்தரவிட்டார்கள்.
    Author By Thiraviaraj Sat, 12 Apr 2025 12:59:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    10 Bill-style cancellation of NEET exam… DMK enters the fray relying on the Supreme Court

    நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போராட்டம் தொடர்கிறது. ‘இறுதியில் வெல்வோம்’ என்ற நம்பிக்கையை ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பானது உறுதி செய்துள்ளது. தொய்வின்றி சட்டப் போராட்டம் நடத்தினால் அதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக முரசொலி தலையங்கம் வெளியிட்டுள்ளது. 

    நீட் போராட்டம் தொடர்கிறது என்கிற தலைப்பில் வெளியாகி உள்ள அந்த கட்டுரையில், ''நீட் விவகாரத்தில் தி.மு.க. நாடகம் ஆடுவதாக தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சொல்லி வருகிறார். நாடகம் ஆடுவது அவர்தானே தவிர, தி.மு.க. அரசு அல்ல. ‘நீட் தேர்வு நல்ல தேர்வுதான், அதனை அகற்ற முடியாது’ என்று முதலமைச்சராக இருந்த போது சொன்னதும் பழனிசாமிதான். இன்றைக்கு நீட் தேர்வை ஆதரிக்கிறேனா – எதிர்க்கிறேனா என்று சொல்லாமல் ‘டிமிக்கி’ கொடுத்துக் கொண்டு இருப்பவரும் பழனிசாமிதான்.

    DMK

    ஆனால் இப்படி ஒரு தேர்வு வரப்போகிறது என்று தெரிந்த காலம் முதல் எதிர்த்துக் கொண்டிருக்கும் இயக்கம் தி.மு.கழகம். அந்தப் போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் இயக்கமும் தி.மு.கழகமே.

    இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் இணைந்து ஒரு முடிவு… கைக்கோர்த்த அதிமுக – பாஜக... உறுதி செய்தார் அமித்ஷா!!

    தமிழ்நாடு அரசால் – சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை நிராகரிப்பதாக ஒன்றிய அரசில் இருந்து தகவல் வந்த உடனே அதனை சட்டமன்றத்தில் சொன்னவர் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இப்படி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதை ஒன்றரை ஆண்டுகளாக மறைத்துவிட்டார்கள். ஒன்றிய அரசின் வழக்கறிஞரே, உயர்நீதிமன்றத்தில் சொன்ன பிறகுதான் அது வெளிச்சத்துக்கு வந்தது. அதன் பிறகும் அன்றைய அ.தி.மு.க. அரசு ஏதும் செய்யவில்லை.

    DMK

    ஆனால் இப்போது, இப்படி ஒரு தகவல் வந்ததும் உடனடியாக சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கடந்த 9.4.2025 அன்று கூட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி அவர்கள் முன்மொழிந்தார்.

    “மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு  குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

    இந்த வகையில், ‘நீட்’ தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜூலை 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வது என ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது”

    DMK

    என்பதுதான் துணை முதலமைச்சர் உதயநிதி முன்மொழிந்த தீர்மானம் ஆகும். இதனை சட்டமன்றக் கட்சிகள் அனைத்தும் சேர்ந்து ஏற்றுக் கொண்டுள்ளன. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறி இருக்கிறது.

    “நீட் தேர்வு மசோதாவை நிராகரித்து இருக்கலாம். ஆனால் ‘நீட்’ தேர்வு முறையை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை.

    நீட் தேர்வு என்பது ஏதோ விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மையங்களின் நலனுக்காக யாரோ சிலர் தங்களின் சுயநலனுக்காக ஒன்றிய அரசை தவறாக வழி நடத்தி நடத்தும் தேர்வு அது. அதையும் முறையாக நடத்தவில்லை என்பது, பல்வேறு மாநிலங்களில் சி.பி.ஐ. மூலமாக வழக்குகள் நடந்து வருவதிலிருந்தே உங்களுக்குத் தெரியும் நாட்டுக்கும் நன்றாகத் தெரியும்.” என்று முதலமைச்சர்  சொல்லி இருக்கிறார்கள்.

    நீட் தேர்வில் எத்தகைய முறைகேடுகள் நடந்து வருகிறது என்பதை நாடு அறியும். ‘தேசிய தேர்வு முகமை’ எனப்படும் என்.டி.ஏ. என்ற அமைப்பு தான் இந்தத் தேர்வை நடத்துகிறது.

    DMK

    “நீட் தேர்வு வினாத்தாள்கள் ஹசாரிபாக், பாட்னாவில் கசிந்திருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நீட் வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்திருக்கிறார்கள் என்பது சி.பி.ஐ. விசாரணை மூலம் தெரிய வருகிறது” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடந்த ஆண்டே தீர்ப்பு அளித்தார்கள். நீட் தேர்வு மோசடியானது என்பதற்கு வேறு சாட்சியம் தேவையில்லை.

    720 மதிப்பெண்ணுக்கு 720 மதிப்பெண்ணை 61 பேர் பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கு வந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கான விசாரணை நடத்த உத்தரவிட்டார்கள். இதன் பிறகு தேர்வு முடிவு திருத்தப்பட்டது. இறுதி முடிவுகளின்படி இந்த எண்ணிக்கை 17ஆக குறைந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடாமல் போயிருந்தால் 61 பேர் 720 மதிப்பெண் வாங்கியதாக ஆகி இருக்கும்.

    2024 மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 23.33 லட்சம் மாணவ, மாணவியர் இந்தியா முழுவதும் எழுதினார்கள். தேர்வு நடந்த நாளின் போதே உத்தரப்பிரதேசம், அரியானா, பீகார், ஜார்கண்ட் ஆகிய பல மாநிலங்களில் வினாத்தாள் கசிந்தது. ஆனால் அதைப் பற்றி தேர்வு முகமை கவலைப்படவில்லை. உடனடியாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    DMK

    அடுத்த மோசடியை ‘கருணை மதிப்பெண்’ என்ற பெயரால் அரங்கேற்றியது தேசிய தேர்வு முகமை. 1500 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு மறுதேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மறுதேர்வுக்கு பலபேர் வரவில்லை. எழுதியவர்கள் முடிவிலும் முன்பு போல் இல்லை. இயற்பியல் வினாத்தாளில் குழப்பம் என்று சொல்லி 44 பேருக்கு கூடுதல் மதிப்பெண் போட்டிருந்தார்கள். அதுவும் உச்சநீதிமன்ற விசாரணையில் ரத்து செய்யப்பட்டது. இதுதான் இவர்கள் நடத்தும் நீட் தேர்வு ஆகும்.

    இந்த மோசடியான தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும். அதற்கான போராட்டம் தொடர்கிறது. பழனிசாமி வழக்கம் போல வேடிக்கை பார்க்கட்டும்' எனக் கூற்ப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு.. திகைத்து போய் சைலண்ட் மோடில் அதிமுக.. விளாசும் திமுக கூட்டணி கட்சி!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share