கோவை இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநராக இருந்தவர் ஆற்றல் அசோக்குமார். கடந்த 2006 ல் இருந்து நிர்வாக இயக்குநராக இருந்த ஆற்றல் அசோக்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியனைந்தார். கட்சியில் சேர்ந்த 4 மாதங்களில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டிருந்தது.

மேலும் மொடக்குறிச்சி பாஜக எல்.எல்.ஏ சி.ஆர்.சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமார் சொத்து மதிப்பு ரூ.683 கோடி என தேர்தலின் போது கணக்கு காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த மார்ச் - 24 தேதி ஆற்றல் அசோக்குமார், பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக நிர்வாக இயக்குநர் பொருப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

மேலும் அனைத்து அதிகாரங்களும் திரும்ப பெறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன், மற்றும் சிவசங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் புதிதாக வந்த நிர்வாகத்தினர் ஆய்வு செய்த போது ஆற்றல் அசோக்குமார் போலியான ஆவணங்களை காட்டி 45 பேருந்துகள் வாங்க, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் பெற்றது தெரியவந்தது.

இதையும் படிங்க: #mutemode மாடல் அரசு... தீக்குளித்த விவசாயியை காப்பாற்ற இபிஎஸ் வலியுறுத்தல்..!
மேலும் பேருந்தின் அசல் விலையை விட கூடுதல் விலைக்கு வாங்கியது லாபம் பெறும் நோக்கத்தில் செயல்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் இதற்காக கடந்த பிப்.28 தேதி நிர்வாக இயக்குநர்கள் கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது போல போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநர் சிவசங்கரன் பட்டனம் சிங்காரம் என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில்
இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குனராக இருந்த அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக் குமார் மீது 336(3), 340(2), 316 (2), ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு செக் வைத்த இபிஎஸ்... இன்பதுரையை களமிறக்க இதுதான் காரணமா?