தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வணக்கம்! எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள்? தேர்தல் பிரச்சாதம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் நம் மக்களை சந்தித்தாலும் இந்த வீடியோ மூலமாக சில விஷயங்களை உங்களிடம் மனசு விட்டு பேசவேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்சம் நாள் எல்லாம் தேர்தல், இந்த சமயத்தில் எனக்கு ஒரு விஷயம் மைண்டில் வருகிறது. 2021ல் இதே மாதிரி ஒரு சட்டம் வந்தது, அந்த சமயத்தில் சிலர் Stalin is more dangerous than Karnanithi என்று சொன்னார்கள். கலைஞருடன் என்னை எப்போதுமே ஒப்பிட முடியாது. அவரை நான் அப்பா என்று கூப்பிட்டதை விட தலைவர் என்று கூப்பிட்டது அதிகம். அப்படிப்பட்ட
தலைவரை விட என்னை More Dangerous-ன்னு சொல்லும் போது, எனக்கு தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைக்கிறவங்களுக்கும், நம்முடைய வாய்ஸைத் தடுக்கும் நினைக்குருங்களுக்கும் நான் இன்றைக்குமே டேஞ்ஜர் தான். அதில் தலைவர் கலைஞரை விட ஒரு படி மேலே இருக்கிறேன் என்றால் அது எனக்கு பெருமை தானே? ஏன்னா இதெல்லாம் நம்ம தமிழர்களுடைய ரத்தத்திலேயே கலந்திருக்கு.
என் மீது நம்பிக்க வைத்து நீங்கள் என்னை முதலமைச்சர் ஆக்கி 5 வருஷமாகிவிட்டது. ஸ்டாலின் சார், சி.எம். ஆனது எல்லாம் சரி, இந்த 5 வருஷத்தில் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று யாராவது கேட்டால், நம்மால் மணிக்கணக்காக, நாள்கணக்காகக்கூட பேச முடியும். முக்கியமா, எப்போதும் தமிழ்நாட்டை வஞ்சிக்கிற ஒன்றிய அரசை எதிர்த்து சண்டை செஞ்சியிருக்கிறதா இன்னம் பெருமையா சொல்ல முடியும். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பது தான் நம்முடைய முதன்மையான குறிக்கோள்.
இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!
அந்த வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு, மகப்பேற உதவி தொகை, மகளிர் உரிமை தொகை, மகளிர் விடியல் பேருந்து பயனம், தோழி மகளிர் விடுதி, மக்களைத் தேடி மருத்துவம் என கருவில் இருக்கிற குழந்தையிலிருந்து வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் வரைக்கும் எல்லாருக்கும் பயன்படுகிற மாதிரி நிறைய திட்டங்களைக் கொண்டு வந்தோம். “நமக்கிட்ட காசி இருந்தால் எடுத்துப்பாங்க... நிலமிருந்தால் பிடிங்கிப்பாங்க... ஆனா படிப்பு மட்டும் யாராலையும் உங்களிடம் எடுத்துக்க முடியாது அப்படின்னு ஒரு சினிமா வசனம் இருக்கு. கல்வி ஒன்றுதான் உங்களிடமிருந்து யாரும் திருட முடியாத ஒரே சொத்து. அதனால்தான் பள்ளிகளில் காலை உணவு திட்டம், இலவச லேப்டாப், அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு மாசம் ஆயிரம் உதவித்தொகை, நான் முதல்வன் திட்டம் என்று கல்விக்காக மட்டும் இந்த ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கு.
நீங்க எந்த டேட்டா வேண்டும் எல்லாம் எடுத்து பாருங்க, தொழில் துறை, விவசாயம், கல்வின்னு எல்லா துறையிலும் தமிழ்நாடு டாப்புல இருக்கும். அதுக்கு அடையாலமா 14 வருஷத்துக்குப்புறம் தமிழ்நாட்டை பொருளாத வளர்ச்சியில் 11.19 சதவிதம் என்ற யாருமே தொடாத இரட்டை இலக்கத்தை தொட்டிருக்கோம். இப்படி எல்லா வகையிலும் நாம் முன்னேறி இருந்தாலும் ஒரு சிறு குறைகளும் இருக்கிறது எனக்குத் தெரியும். ஏன்னா நம்முடைய ஆட்சியைப் பற்றி குறைகள் வந்தாலும் காது கொடுத்து கேட்கிறவன் நான். குறைகளா சொல்லப்பட்ட சில விஷயங்களில் கூட நாம மற்ற மாநிலங்களை விட குறைவாகவே இருக்கோம்.
அது விளைவிகளை இன்னும் கொஞ்ச நாளில் நாம் பாப்போம். உங்கள் எல்லாருக்கும் தெரியும். ஒன்றிய அரசு தொகுதி மறுவரை என்னும் ஒரு மசோதாவை கொண்டு வந்தாங்க. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி தொழில் வளர்ச்சியில் best performing state ஆமாம் இருக்கும் நம்மை தண்டிக்கத்திற்காகவே அந்த மசாதா கொண்டு வந்த மாதிரி இருந்தது. உடனே அந்த மசோதாவுடைய நகல் எறிப்பும் நம்ம தமிழ் மணில் என் மூலமா ஆரம்பிச்சது. நாம் கொழுத்தின அந்த நெருப்புதான் இன்றைக் கொழுந்து விட்டு எறிந்து அந்த மசோதாவை சாம்பளாக்கியிருக்கு. தேர்தல் நடக்கும் இந்த சமயத்தில் இவ்வளவு ஆணவத்தோடு நம்மை வஞ்சிக்கிறார்கள் என்றால் இந்த தேர்த்தலில் எடப்பாடி பழனிசாமி ஜெயிச்சி ஆட்சிக்கு வந்துட்டா, என்னென்ன கொடுமைகள் எல்லாம் அரங்கேறுன்னு நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்ல.
பாஜக மாதிரி மதவாத சக்திகள் திமுகவை இந்துக்கிளுக்கு எதிரான கட்சி என்று பொய்யான ஒரு பிரச்சாரம் பண்ணிட்டு இருக்காங்க. ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் பண்ணியிருக்கோம், 7000 ஏக்கர் மதிப்புள்ள கோவி நிலங்களை மீட்டு இருக்கும் இப்படி பொய்யான பிரச்சாரம் மட்டும்களுக்கு ஒன்னே ஒன்று சொல்லுகிறேன் 60 வருஷமா திராவிட கட்சிக்கள் ஆளுகிற தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிகமான கோவில்கள் இருக்கு. இன்று இதெல்லாம் தெரிந்தும் அதிமுக அடிமை கட்சிக்கு ஓனரான பாஜக காலில் எடப்பாடி விழுந்து கிடக்கிறார். ஆனால் சிறுபான்மையின மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எண்ணைக்குமே நாங்கள் கலத்தில் இருப்போம். அவர்கள் உரிமைகளுக்காக போராடுவோம். 1970 நிலை, மிசா என்கிற ஒரு போரை அன்றைய ஒன்றிய அரசுக்கு எதிராக நடத்தினப்போ, அதில் போராடிய கலைஞரின் மகன், இன்று நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன்.
இப்பவும் நமக்கு எதிரான போரை எதிர்த்து நிக்கிறேன். எந்த பிரச்சினை வந்தாலும் தமிழாட்டையும் தமிழர்களையும் பாதுகாத்து நிற்பேன். இது என்னுடைய உறுதிமொழி. நம்ம உழைப்பை, நம்ம மக்களுடைய கலாசாரத்தை, நம் மொழியை அழிக்கனுன்னு நினைக்கிறவங்களோ, அவர்களோட அடிமைகளோ நமக்கு வேண்டாம். இந்த வளர்ச்சியும், வளமான எதிர்காலமும் அடுத்த 5 வருஷத்துக்கு தொடரனும். நான் உங்களோட அப்பாவா, அண்ணனா, தம்பியா, ஒரு தோழனா உங்ககிட்ட உரிமையோட கேட்கிறேன். மீண்டும் இந்த நல்லாட்சி தொடர உதயசூரியன் சின்னத்திலும், மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சின்னத்திலும் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள். வெல்வோம் ஒன்றாக” என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: துணை முதல்வர் உதயநிதிக்கு எத்தனை கோடி சொத்து..? வேட்பு மனுவில் குறிப்பிட்டசொத்து விபரம்..!!