2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என இருபெரும் திராவிட இயக்கங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு தமிழக வெற்றிக் கழகம் தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், பிற கட்சிகளின் ஆதரவை நாடி வருகிறது. தற்போது காங்கிரஸ் சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தாலும், இன்னம் 6 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெகவிற்கு தேவை. இதனால் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்த விஜய், தன்னிடம் காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 112 பேரின் ஆதரவு இருப்பதாகவும், ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபிப்பதாகவும் கடிதம் வழங்கினார். ஆனால் இன்னும் இரண்டு நாட்களில் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஆட்சி அமைக்கும் படி விஜய்க்கு ஆளுநர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
தற்போது 2வது முறையாக ஆளுநரைச் சந்தித்த போதும் விஜய், முதலமைச்சராக பதவியேற்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத ஆளுநர் அர்லேகர், பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவிப்பிரமாணம் செய்து வைப்பேன் என கறாராக விஜயிடம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: விழுந்தது பேரிடி... காங்கிரஸுக்கு ஷாக் கொடுத்த சாக்கோட்டை அன்பழகன்... அறிவாலயத்திற்கு பறந்த முக்கிய மெசெஜ்...!
தமிழக அரசியல் களத்தையே இச்சம்பவம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்களை வைத்து அரசியல் நடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தற்போதும் இடையூறு செய்து வருகிறது.
அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது அரசியலமைப்பிற்கு எதிராக உள்ளது. மேலும், ஆளுநரின் செயல் உள்நோக்கம் கொண்டதாகவுள்ளது. பொறுப்பேற்றுக் கொண்ட கட்சியானது, தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது சட்டமன்றத்தில் தானே தவிர, ஆளுநர் மாளிகையில் இல்லை. எனவே, உடனடியாக ஆளுநர் விஜய் அவர்களை ஆட்சி அமைப்பதற்கு அழைக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!