வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் வியூகத்தை அதிரடியாக வெளியிட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், மொத்தம் 175 தொகுதிகளில் 'உதயசூரியன்' சின்னம் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் திமுக வேட்பாளர்கள் மட்டும் 164 தொகுதிகளில் நேரடியாகக் களம் இறங்க உள்ளனர்.
கூட்டணி தர்மத்தைப் பேணிக் காக்கும் அதே வேளையில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கத் தேவையான பலத்தைப் பெறும் வகையில் இந்தத் தொகுதிப் பங்கீடு அமைந்துள்ளது. திமுகவின் முக்கியத் தோழமைக் கட்சிகள் சிலவும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடச் சம்மதம் தெரிவித்துள்ளதால், மொத்தமாக 175 இடங்களில் இந்தச் சின்னம் மின்னப் போகிறது. குறிப்பாக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) உள்ளிட்ட சில சிறிய கட்சிகள் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட உள்ளன.
மீதமுள்ள தொகுதிகள் காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன. மதவாத சக்திகளைத் தமிழக மண்ணிலிருந்து வேரறுக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன், 'உதயசூரியன்' சின்னம் அதிக இடங்களில் போட்டியிடுவது தங்களுக்குப் பெரும் பலம் என உடன்பிறப்புகள் உற்சாகத்தில் உள்ளனர். வேட்பாளர் பட்டியலும் தயார் நிலையில் உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
இதையும் படிங்க: கமலுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை! முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!