அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். இந்த உற்சாகம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் கரூர் மாவட்டத்தின் நிகழ்ந்த ஒரு துயர சம்பவம். கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் சுற்றுப்பயணத்தை நடத்தினார்.
விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 உயிர்கள் அனாமத்தாக பறிபோனது. மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டை உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு உடனடியாக அறிவித்தது.

இந்த சம்பவம் தொடர்பான வடக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றையும் அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்று நினைத்த தமிழக வெற்றி கழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகமும் கரூர் சம்பவத்தை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. கரூர் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டதுடன் ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் குழு ஒன்றை கண்காணிக்க அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: கூட்டணிக்கு தவம் இருக்கோமா? அந்த அவசியம் அதிமுகவுக்கு இல்ல... ராஜேந்திர பாலாஜி காட்டம்...!
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். இந்த துயரச்சபம் தொடர்பாக விசாரிப்பதற்காக கரூர் சென்றுள்ள சிபிஐ அதிகாரிகள் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ளனர். அவர்களை சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற்று இருந்த திருமால் என்ற அதிகாரி சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சிறியை அதிகாரிகளுடன் அவர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கரூர் கோரச் சம்பவம்... ஒருவழியா வெளிய வந்தாச்சு! தவெக நிர்வாகிகளுக்கு ஜாமின்...!