தவெக தலைவர் விஜய் ஆண்டுதோறும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி மாமல்லபுரம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய விஜய், நீட் தேர்வு மட்டும் தான் உலகமா. நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெரிது.

அதுல நீங்க சாதிக்க நிறைய இருக்கு. குறிப்பிட்ட ஒரு பாடத்துல மட்டும் அதிக மதிப்பெண் எடுத்து சாதிக்கணும்னு நீங்க எந்த அழுத்தத்தையும் ஏத்திக்க வேண்டாம் என்று தெரிவித்தார். விஜய்யின் இந்தக் கருத்து சர்ச்சையாகியுள்ளது. அவரின் கருத்தை ஒரு சிலர் ஆதரித்தாலும், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மாணவர்களின் உரிமை பறிக்கப்படும் நிலையில், விஜய்யின் இந்த கருத்து பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது என்று திமுக நிர்வாகிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: கமல் படத்தை அனுமதிக்காவிட்டால்.. தமிழகத்தில் கன்னடப் படம் வெளியிட முடியாது.. வேல்முருகன் எச்சரிக்கை.!

மறுபுறம் நீட் தேர்வுக்காக தற்கொலை செய்த அரியலூர் மாணவி அனிதாவின் அண்ணன் மணிரத்தினம் தன்னுடைய எக்ஸ் தளத்தில், நீட் மட்டும்தான் உலகமா. படிப்பு மட்டும்தான் வாழ்க்கையா என்று நடிகர் விஜய் மாதிரியான உச்சபட்ச நடிகர்களின் குழந்தைகளிடம் வேண்டுமானால் கேட்கலாம். சினிமாத்துறையில் இருந்த தன் அப்பாவால், நடிகர் ஆன விஜய், மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தன் மகனை இயக்குநராக்கி விட முடியும்.

மூட்டைத் தூக்கும் அனிதாக்களின் தந்தைகள், எப்படியாவது படிச்சி நல்ல வேலைக்கு போயிடுமா? என்றுதான் சொல்வார்கள். அனிதாக்கள் மருத்துவம் படிப்பதை "தீட்"டு என்கிறது "நீட்", நீங்கள் நீட்தேர்வை எதிர்ப்பதை விடுத்து, மருத்துவத்தை விட்டு நம் குழந்தைகளை தள்ளி நிற்கச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். இதேபோல் பலரும் விஜய்யின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய் பச்சாவா.? அப்போ உதயநிதி சோட்டா பச்சா.. துரைமுருகனுக்கு தவெக ஹாட்டான பதில்!