விஜய் பச்சா என்றால் உதயநிதி சோட்டா பச்சா என்று த.வெ.க. கொள்கை பரப்பு செயலர் ராஜ்மோகன் அமைச்சர் துரைமுருகனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சென்னையில் ராஜ்மோகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "வியாசர்பாடி விவகாரத்தில் எங்கள் கட்சி மகளிர் அணியினர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இனிமேல் எங்கேயாவது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் தாக்கப்பட்டால், அது மக்கள் போராட்டமாக வெடிக்கும். தவெகவை பொறுத்தவரை பாசிசத்துடனும் பாயாசத்துடனும், கூட்டணி கிடையாது.

திமுக மற்றும் பாஜகவை தவிர்த்து, எங்கள் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு யார் வந்தாலும், அவர்களோடு கூட்டணி வைக்க தயாராக உள்ளோம். மக்கள் சக்தியோடுதான் எங்களுக்கு கூட்டணி. விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது, மக்கள் சக்தியோடுதான் கூட்டணி எனக் கூறியதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அவர் கூட்டணி அமைத்த பிறகு, அவருடைய நிலைமை என்ன ஆனது என்பதை ஊடகங்கள் அறியும்.

நேற்று முளைத்த காளான், பச்சா என அமைச்சர்கள் விஜய்யை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் உதயநிதியைக் குறிப்பிட்டு கூறுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. எங்கள் தலைவர் விஜய் பச்சா என்றால், உதயநிதி சோட்டா பச்சா. பொறுப்பான அமைச்சர்கள், பொறுப்பாக பேசுவார்கள் என எதிர்பார்க்கிறோம்." என்று ராஜ்மோகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணியில் இணைகிறாரா விஜய்? - நயினார் நாகேந்திரன் சூசகம்...!

திமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சித்து வரும் நிலையில், விஜய்யை அமைச்சர் துரைமுருகன், பச்சா பாலிடிக்ஸ் என்று கிண்டலடித்தார். அமைச்சர் சேகர்பாபு, நேற்று முளைத்த காளான் என்று விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: அதிகார அட்டூழியங்கள் தான் திராவிட மாடலா? தவெகவினருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சீமான்...