உலக யோகா தினத்தை முன்னிட்டு நெல்லை திருமால் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் யோகா செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, ஒவ்வொரு ஆண்டும் யோகா தினம் கொண்டாடி வரப்படுகிறது. பிரதமர் மோடி இதைக் கொண்டு வரும்பொழுது 175 நாடுகள் அவமதித்தது.

இதிலும் சிலர் அரசியல் செய்வார்கள். தினசரி ஒவ்வொருவரும் யோகாவை கடைப்பிடித்து வாழ்க்கையில் ஆரோக்கியமாக வாழ்ந்து ஆஸ்பத்திரி இல்லாத உலகத்தை ஆரம்பிக்க வேண்டும். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு நீதிமன்றம் இ பாஸ் வேண்டாம் என்று கூறியுள்ளதே என்ற கேள்விக்கு, தமிழக அரசில் நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் நீதி கிடைத்திருக்கிறது.

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேல் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை. அவர்கள் கொடுக்கும் திட்டங்களை மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டி செய்கிறது. தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்கள். தமிழைத் தவிர வேறு எதுவும் அவர்களுக்கு தெரியாது. ஐ.நாவிற்கு போனாலும் அயோத்திக்கு போனாலும் பிரதமர் மோடி தமிழைப் பற்றியே பேசி வருகிறார். முதலமைச்சருக்கு எதுவுமே தெரியவில்லை பாவம்.

இதையும் படிங்க: திடீரென திருப்பரங்குன்றத்திற்கு விசிட் அடித்த திருமா... சிக்கந்தர் தர்காவை பார்வையிட்டதால் பரபரப்பு...!
திருமாவளவன் சீட்டைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று சொல்கிறார். தற்பொழுது 5 சீட்டு வாங்கி இருக்கிறார்கள். 2 சீட்டு வாங்கிக்கொண்டு திமுக கூட்டணியில் தொடர்வாரா. புதிதாக பாஜக அதிமுக கூட்டணியில் பலரை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வலுவான கூட்டணியாக உள்ளது. அதனால்தான் அடிக்கடி நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். பிரதமர் வரக்கூடிய அளவிற்கு தமிழகத்தில் எதுவும் இல்லை. அமித்ஷாவே அதை கவனித்துக் கொள்கிறார் என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!