பாகமவில் அப்பா, மகன் இடையிலான உரசல் உச்சக்கட்டத்தை எட்டி வந்த நிலையில், இருவரும் சந்தித்து பேசினால் சுமூக முடிவு எட்டக்கூடும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து கடந்த 5ம் தேதி தைலாபுரம் தோட்டத்திற்கு நேரில் சென்ற அன்புமணி, ராமதாஸ் மற்றும் தனது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

அன்புமணி சென்னை கிளம்பிய சிறிது நேரத்திலேயே தைலாபுரம் தோட்டத்தில் வைத்து ராமதாஸ் உடன் ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்தும், அப்பா மகன் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் பேசப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த ஆடிட்டர் குருமூர்த்தி, ராமதாஸ் எனது நீண்ட கால நண்பர் என்பதால் அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்ததாக கூறிவிட்டுச் சென்றார். இருப்பினும், அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பு பெரும் விவாதங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், ஆடிட்டர் குருமூர்த்தி, சைதை துரைசாமியுடனான சந்திப்பு குறித்து பேசியுள்ளார்.
இதையும் படிங்க: குருமூர்த்தியிடம் ஏன் பேசினேன்? ராமதாஸ் கட்டவிழ்க்கும் முடிச்சுகள்...
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசியதாவது, “நான் சென்னைக்கு என்னுடைய சொந்தங்களை பார்ப்பதற்காக செல்கிறேன். குழந்தைகள், பேரன், கொள்ளு பேரன் இருக்கிறார்கள். திங்கட்கிழமை மீண்டும் தைலாபுரம் வருகிறேன். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்திக்கிறேன். நான் மருத்துவ பரிசோதனைக்கு போகவில்லை. நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன் என்றார்.

தொடர்ந்து ஆடிட்டர் குருமூர்த்தி என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அவரை நான் ரொம்ப மதிக்கிறேன். எங்கள் நட்பு, நீண்ட நாள் நட்பு. அதே போல் சைதை துரைசாமியையும் நான் மதிக்கிறேன். அவர் எனக்கு 30 வருடமாக பழக்கம். அவங்க ரெண்டு பேரும் என்னை சந்தித்து பேச வந்தாங்க. நீங்க பார்த்திருப்பீங்க என்றார்.
இதையும் படிங்க: ஏலேய் சமாதானம்-ல! ஜி.கே மணி சொன்ன குட் நியூஸ்.. தொண்டர்கள் குஷி..!