பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சகட்ட எட்டியுள்ளது. கட்சியில் அன்புமணிக்கு ஆதரவாக செயல்படுவோரை பாமக நிறுவனர் ராமதாஸ் பொறுப்புகளை பறித்து வருகிறார். நேற்று பொருளாளர் திலகபாமா உள்ளிட்டோரின் பதவி பறிக்கப்பட்டது. ஆனால் உடனடியாக திலகபாமா பொருளாளராக நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் பதில் அறிக்கை வெளியிட்டார். அத்துடன் தானே கட்சிக்கு தலைவர். தான் கையெழுத்திடுவதுதான் இறுதியானது. யார் மாற்றப்பட்டாலும் மாற்றப்படுவதாககடிதம் வந்தாலும் உடனே அவர்கள் மீண்டும் பொறுப்பில் நியமிக்கப்படுவார்கள் என்றெல்லாம் அன்புமணி கூறியிருந்தார்.

நேற்று ஐந்து மாவட்ட செயலாளர்கள், இரண்டு மாவட்ட தலைவர்கள் வந்து நீக்கி அதிரடியாக உத்தரவை வெளியிட்டுருந்த நிலையில் தற்போது காலை முதலே பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் மாவட்ட தலைவர்கள் என அனைவருமே தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுத்து வருகிறார்கள். இந்நிலையில் வந்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த நான்கு மாவட்டத்தை நான்கு பகுதியை சேர்ந்த மாவட்ட செயலாளர்களை தற்போது வந்து அதிரடியாக மாற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: பாமகவில் நடப்பதை பார்த்தால் செத்துவிட தோன்றுகிறது... பகீர் கிளப்பும் ஜி.கே.மணி...!
கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் இன்று முதல் நியமனம் செய்யப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த கார்த்திகேயன் நீக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்துள்ளார். அதேபோல கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளராக கோபிநாத்தை நியமனம் செய்துள்ள ராமதாஸ், ஏற்கனவேஇருந்த முத்து கிருஷ்ணன் நீக்கியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக சசிதரன் என்பவர் நியமிக்கப்பட்டு, ஏற்கனவே இருந்த செல்வ மகேஷ் நீக்கப்பட்டிருக்கிறார். கடலூர் மாவட்டதைச் சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளராக ஜெகன் நியமிக்கப்பட்டு, ரவிச்சந்திரன் என்பவர் நீக்கப்பட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: ரூ.1000 கோடி சொத்து யாருக்கு? கட்சி அதிகாரம் குறித்து ஆடிட்டர், வழக்கறிஞருடன் ராமதாஸ் ஆலோசனை..!