பாமக-வில் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸூக்கும், அக்கட்சியின் தலைவரான அன்புமணிக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. தனது மகன் அன்புமணிக்கு போட்டியாக பாமக செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை ராமதாஸ் நியமித்துள்ளார்.
அன்புமணி தலைமையிலான பாமக-வை அங்கீகரித்தும், அவரது தலைவர் பதவியை நீட்டித்தும், மாம்பழ சின்னத்தை அன்புமணி தரப்புக்கு வழங்கியும் தேர்தல் ஆணையம் கடந்தாண்டு அன்புமணி தரப்புக்கு கடிதம் அனுப்பியது. இந்நிலையில் பாமக-வுக்கு நான் தான் தலைவர் என சொந்தம் கொண்டாடி பாமக நிறுவனரான ராமதாஸ் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.அருள், வி.எஸ்.கோபு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.
அதில் ஒன்று அன்புமணிக்கு மாம்பழ சி்ன்னம் வழங்கியும், பாமகவின் தலைவர் என பதவியை நீட்டித்தும் வழங்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்தின் கடிதங்களை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரப்பட்டது.
இதையும் படிங்க: 12 நாட்களில் 15,000 கோடி... டெண்டருக்கு 20% கமிஷன் சுருட்ட பார்க்கும் திமுக... புள்ளி விவரத்தோடு புயலைக் கிளப்பும் அன்புமணி...!
இதேபோல பாமக பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் முரளி சங்கர் சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘பாமகவின் பெயரையோ, கட்சி கொடியையோ அல்லது மாம்பழ சின்னத்தையோ அன்புமணியோ அல்லது வேறு யாருமோ பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும்” எனக்கோரியிருந்தார்.
தற்போது பாமகவில் தந்தை மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாமகவின் பெயர் கொடி மற்றும் சின்னத்தை பயன்பட்ட அன்புமணிக்கு தடைவிதிக்கக்கோரியும், தலைவராக தம்மை அறிவிக்க கோரியும் ராமதாஸ் சார்பில் சென்னை உரிமை நீதிமன்றத்தில் மனத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தபோது அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கை மார்ச் மாதம் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசியலில் இருந்து ஒழித்துக் கட்ட முயற்சி... அதிமுக்கிய அறிவிப்பை வெளியிட்ட ராமதாஸ்...!