சென்னை சோழிங்கநல்லூரில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளை அன்புமணி சந்திக்கவுள்ளார். நேற்று தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது மட்டுமில்லாமல் அவருக்கு பக்குவமோ தலைமை பண்போ இல்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நேற்று இரவு தைலாபுரம் இலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கட்சியின் கௌரவ தலைவர் ஜி. கே மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சமூக முன்னேற்ற கழக மாநில தலைவர் சிவபிரகாசம், வன்னியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பரந்தாமன், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக்க தலைவர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கடலூர், திருவண்ணாமலை மயிலாடுதுறை உள்ளேட்ட மாவட்டங்களைச் சேர்ந்து அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 25 பேரை பதவியிலிருந்து நீக்கி புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்து அது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனை இரண்டு மணி நேரத்துக்கு மேல் நீடித்த நிலையில் இன்று அன்புமணி என்ன பேசுகிறார் என்பதை பொறுத்து 25 பேர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே சென்னை சோழிங்கநல்லூரில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளை அன்புமணி சந்திக்க இருக்கிறார். ராமதாசுடன் ஏற்பட்டுள்ள மோதல், அவர் முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி தீவிர ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி வளர்ச்சி புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் பேச திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: நாமக்கல் பாலத்தில் விரிசல்.. எல்லாம் கர்மா.. கருணாநிதி சொன்னதை லிங்க் செய்து ஸ்டாலினை ஹெச். ராஜா டேமேஜ்!
இதையும் படிங்க: குற்றம் சுமத்திய ராமதாஸ்! கட்சியில் காய் நகர்த்தும் அன்புமணி!