பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடன்பிறப்பே வா’ என்ற நிகழ்வின் மூலம் ஒன்றிய, நகர, பேரூர் கழகத்துடைய செயலாளர்களை ஒவ்வொருவரையும் தனித் தனியாகச் சந்திப்பேன் என்று 1 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் முதலமைச்சர் அறிவித்தார்.

அதற்கு ஏற்ப கடந்த 23 ஆம் தேதியில் இருந்து இதுவரை 20 தொகுதியின் மத்திய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், மண்டல பொருப்பாளர்கள் ஆகியரோடு தலைவர் தளபதி நாள்தோறும் 3 மணி நேரம் உரையாடி வருகின்றார். ஒவ்வொரு கூட்டமும் 3 மணி நேரத்திற்கு மேலாக அவர்களின் கருத்துகளைக் கேட்டு, தலைவரும் நிர்வாகிகளும் மனம் விட்டு பேசினார்கள். அதன் அடிப்படையில் கழகத்தின் தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.
இதையும் படிங்க: உங்க அம்மா, பொண்டாட்டிய பத்தி பேசுனா இப்படிதான் பிண்டம் மாதிரி இருப்பீங்களா? ஆர்.எஸ் பாரதி கடும் சாடல்...

ஒன்றிரண்டு நாட்களில் உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்க இருக்கிறார்கள். ஆகவே உணர்ச்சியோடு, மகிழ்ச்சியோடு இந்த சந்திப்பு மிகவும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. நாங்கள் தெளிவாக எங்களின் அறிக்கையில் சொல்லிவிட்டோம், எங்களை விட பொதுமக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள், தமிழ்நாடே கொதித்து போய் இருக்கிறார்கள்.

பெரியாரையும், அண்ணாவையும் பழித்தவர்கள் யாரும் தமிழ்நாட்டு அரசியலில் தலையெடுத்தது இல்லை. இந்த இரு பெரும் தலைவர்களையும் இழித்து பேசியதை வேடிக்கை பார்த்ததைத் திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமில்ல, தமிழ் உணர்வுமிக்க அனைவரும் கண்டனத்தை தெரிவித்து கொண்டு இருக்கிறார்கள். அதனை நீங்களே பார்க்கலாம். ஒரு சொல்லும் சரி, ஒர் ஆயிரம் சொல்லும் சரி உணர்ச்சி உள்ளவர்களுக்கு உறைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எழுத்தில் சூரப்புலி... செயலில் எலி! அவரு சூனாபானா தவழப்பாடியார்... நக்கலடித்த ஆர்.எஸ்.பாரதி