அரசியலில் தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் விஜய் எடுத்திருக்கிறதா சொல்லப்படுற ஒரு முடிவு அரசியல் வட்டாரத்துல பெரும் பபரபரப்பைக் கிளப்பி இருக்கு. முதலமைச்சர் ஒரு முக்கியமான மாற்றத்திற்கு தயாராகி வருவதாகவும், அந்த மாற்றத்தின் பின்னணியில் இருப்பது நிர்வாகத் தேவையா? இல்லை ஜோதிட ஆலோசனையா அப்படிங்கிற கேள்வி எழுந்திருக்கு.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற போது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நல திட்டங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நான் முதல்வர் திட்டம் நிறுத்தப்படுவதாகவும், அத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் பெயர் மகளிர் பயணத்திட்டம் என மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. சமீபத்தில் கூட பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் “முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்” என்ற பெயர் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டம்” என மாற்றப்பட்டுள்ளது.
இப்படி தவெக ஆட்சியில் பல மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதலமைச்சரின் அறை, அருகேயுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகக் கோட்டைப் பாரம்பரியக் கட்டிடத்தில் இயங்கி வரும் முதல்வர் விஜய் அலுவலகத்தை, தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள 10 மாடிகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடமாற்றம் செய்வது தொடர்பாக ஆரம்பக்கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: மேகதாது பிரச்சனையில் நேருக்கு நேர்..! ஆகஸ்ட் 3-ல் விஜய் - டி.கே.எஸ் சந்திப்பு.!! காவிரியில் திருப்புமுனையா..?

தினந்தோறும் உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதர்கள் வந்து செல்லும் சூழலில், தற்போதைய அலுவலகத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால் 10-வது தளத்திலுள்ள கருத்தரங்கக் கூடம் உள்ளிட்ட பகுதிகளைப் புதுப்பித்து முழுமையாகச் செயலகமாக மாற்றத் திட்டமிடப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த இடமாற்றத்தின் பின்னணியில் வாஸ்து மற்றும் ஜோதிட ஆலோசனைகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, தற்போதைய அறை வாஸ்துபடி சரியாக இல்லை என்றும், 'அரசியலில் தொடர்ந்து உச்சத்தில் இருக்க வேண்டுமென்றால் உயரமான கட்டிடத்தில் இருந்து முதல்வர் அலுவலகம் செயல்பட வேண்டும்' என்றும் ஆஸ்தான ஜோதிடர் அறிவுறுத்தியதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பேசப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ உத்தரவுகள் எதுவும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன CM.. பாஜகவுக்கு விசுவாசமா.? ஆதரவும், கைதும்..! அப்பாவு விமர்சனம்..!!