2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழகத்தின் அனைத்து முக்கிய கட்சிகளுமே கூட்டணிகளை கட்டமைப்பது, கட்சியினரை தேர்தலுக்கு தயார்படுத்துவது என மும்முரம் காட்டி வருகின்றன. இதில், ஆளும் கட்சியான திமுக-வும் ஆண்ட கட்சியான அதிமுக-வும் மற்றவர்களை விட ஒருபடி மேலாகவே தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன.
அதேசமயம், பூத் கமிட்டி அமைத்தல், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில் அதிமுக இன்னும் தேக்க நிலையிலேயே இருக்கிறது. ஒரு சில இடங்களில் மாவட்டச் செயலாளர்களே பூத் கமிட்டி விஷயத்தில் பொய்க் கணக்கு எழுதியும் கட்சித் தலைமையிடம் பொல்லாப்பு அடைந்திருக்கிறார்கள். ஓரணியில் தமிழ்நாடு என்று சொல்லி ஹைடெக்காக கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆளும் கட்சியான திமுக. அதற்கு முன்னதாகவே பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை முடுக்கிவிட்ட அதிமுக தலைமை, தான் நினைத்தபடி பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் முழுமையாக செய்துமுடிக்கவில்லை என்று கண்டுபிடித்து அந்த மாவட்டச் செயலாளர்களை ட்ரில் வாங்கியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்த திடீர் முடிவால் அதிமுகவில் இருக்கிற சீனியர் தலைவர்கள் கட்சியின் ஐடிவிங் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். 2026 தேர்தல்ல ஆத்திமுகாவோட பூத் கமிட்டி பக்காவா இருக்கணும்னு ஆசைப்படுறாராம் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில இருக்கிற 70,000 பூத்துகளுக்கும் குறைந்தபட்சம் ஒன்பது பேரை நியமிக்கணும்ங்கிறது அவரோட கனவுங்கிறாங்க. இதுக்காக கடந்த மூணு வருஷமா பல கூட்டங்களை போட்டு நிர்வாகிகளை நேரில் அழைத்து பல வியூகங்களை வகுத்து கொடுத்தாராம்.
இதையும் படிங்க: அதிமுகவுக்கு ரூட்டை கிளியர் செய்து விட்ட உதயநிதி... செம்ம குஷியில் எடப்பாடி பழனிசாமி...!
அப்படி எல்லாம் செய்தாலும், எடப்பாடி பழனிசாமியோட பூத் கமிட்டி திட்டம் இன்னும் நிறைவேறாமல் இருக்குங்கிறாங்க. இதை சரி செய்ய மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளர்களை நியமிச்சாரு எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகும் ஓரளவு வேலைகள் கூட அதிமுக பொதுச்செயலாளர் நினைச்ச அளவுக்கு பூத் கமிட்டி வேலைகள் நடக்கவில்லை. இதனால் பூத் கமிட்டிகளை சரிபார்க்க கட்சியோட ஐடிவிங்கில் வேலை பார்க்கிற இளைஞர்களை தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டிருக்காங்களாம். இந்த இளைஞர்கள் வயசுலயும் சர்வீஸ்லயும் சீனியர்களான மாவட்ட செயலாளர்களை கூப்பிட்டு இந்த வேலையை முடிச்சிட்டீங்களா?, பொதுச்செயலாளர் சொன்ன மாதிரி ஏன் செய்யல? அப்படின்னு துருவ துவங்கி இருக்காங்களாம்.
கட்சியில் எங்களோட சீனியாரிட்டிதான் அந்த பசங்களோட வயசு. அவங்க எங்களை இப்படி எல்லாம் கேட்கறது சங்கட்டமாக இருக்கிறது என புலம்புறாங்களாம்.
இதையும் படிங்க: இபிஎஸ் அடிமை… என்ன பொசுக்குன்னு இப்படி பேசிட்டாரு உதயநிதி? தொண்டர்கள் ஷாக்…!