மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “திமுக அரசு 100 சதவீதம் தோல்வி அடைந்த அரசாகும். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை 10 சதவீதம்கூட நிறைவேற்றவில்லை. ஆனால் 90 சதவீதம் நிறைவேற்றியதாகக் கூறுகிறார்கள். தைரியமிருந்தால் வாக்குறுதிப் பட்டியலை எடுத்துவந்து, நிறைவேற்றிய திட்டங்களைக் காட்டுங்கள்” என பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஆ.ராசா, நாங்கள் செய்த அனைத்து திட்டங்களையும் ஆதாரத்துடன் காண்பிக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான விவாதத்திற்கு அமித்ஷா தயாரா? டெல்லியிலா? சென்னையிலா? புவனேஸ்வரிலா? எங்கு வேண்டுமானாலும் நான் வருகிறேன். ஆனால், இந்தியில் மட்டும் பேசாதீர்கள் எனக்கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ராசா அவர்களே... வாக்குறுதி தொடர்பாக... தமிழக மக்களின் மனதைத்தான் மரியாதைக்குரிய அமித் ஷா பிரதிபலித்தார்கள்... முதலில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாமல் தூய்மையான அமைச்சராக வலம் வரும் அவரை விவாதத்திற்கு அழைப்பதற்கு திகாரில் இருந்த உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை.. ஆனாலும் அவரை விவாதத்திற்கு அழைப்பதற்கு முன்னால் உங்கள் மனசாட்சியோடு விவாதியுங்கள்நீட் பரீட்சையை நீக்க முடியாது என்று தெரிந்தும் அப்பட்டமாக முதல் கையெழுத்து என்று பொய் சொன்னீர்களே.. முதலில் அதை
விவாதியுங்கள்

அடுத்து உங்கள் விவாதங்களை டாஸ்மாக் வாசலில் வைத்துக் கொள்ளுங்கள்.. டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று முதல்வர் தன் வீட்டிற்கு முன்னால் ஏன் நின்று கருப்புக்கொடி ஏந்தினார் அது என்ன ஆனது என்று விவாதியுங்கள்.
உங்கள் விவாதத்திற்கு பாதிக்கப்பட்ட தாய்மார்கள் காத்திருக்கிறார்கள் . அவர்களிடம் விவாதம் செய்ய உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா அதே தாய்மார்களுக்கு உதவுகிறேன் என்று 100 ரூபாய் கேஸ் மானியம் கொடுப்போம் என்று சொன்னீர்களே... அவர்களிடம் சென்று அதை விவாதிக்க உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா?

இதையும் படிங்க: கமல் இதை செஞ்சே ஆகனும்... கன்னடம் தமிழ் மொழி விவகாரத்தில் தமிழிசை வலியுறுத்தல்!!
ஒப்பந்தத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த செவிலியர்கள் ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள் என்று அந்த வாக்குறுதிகளை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறார்கள் முதலில் அவர்களிடம் சென்று உங்களால் விவாதிக்க முடியுமா... மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து என்று சொன்ன வாக்குறுதிக்காக மாணவரிடம் சென்று முதலில் விவாதியுங்கள்.... பழைய பென்ஷன் திட்டம் கொண்டு வருவேன் என்று நீங்கள் ஏமாற்றிய அரசு ஊழியர்களிடம் சென்று முதலில் அதைப் பற்றி விவாதிகள்.... நீங்கள் எல்லாம் வாய்ச்சொல் வீரர்கள் பொய் சொல்லி திரிகிறீர்கள் என்று தமிழ் மக்களுக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்... 2026 இல் தோல்வியை சந்திக்க தயாராக இருங்கள்... என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: திமுக அரசு சர்க்காரியா கமிஷனினால் சர்டிபிகேட் பெற்றவர்கள்... எந்த விஷயத்தில் தெரியுமா? தமிழிசை தாக்கு!!