தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் நபர் விஜய். 234 தொகுதிகளிலும் அவரது தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடுகிறது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய நாளில் இருந்தே புஸ்ஸி ஆனந்த் பணத்தை பெற்றுக்கொண்டு பதவி கொடுக்கிறார், மாவட்ட செயலாளர் முதற்கொண்டு கிளைச்செயலாளர் வரை அனைத்து பதவிக்கும் லிஸ்ட் போட்டு பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அதன் பின்னர் சற்றே அமைதியான நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் சர்ச்சைகள் வெடித்தன.
குறிப்பாக பணம் உள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டுள்ளதாகவும், காலம் காலமாக விஜய் ரசிகர் மன்றத்தில் உழைத்த ரசிகர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுவும் முதற்கட்ட வேட்பாளர்கள் நேர்காணலின் போது “ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் தேவை. அதை செய்ய முடியுமா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?
கட்சிக்கு 2 முதல் 5 கோடி நிதி கொடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த முறை தேர்தலில் சீட் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மற்றொரு பகீர் சம்பவமும் அரங்கியுள்ளது. விஜய் 234 வேட்பாளர்களையும் மாமல்லபுரத்தில் அறிவித்த அதேநாளில், அவர் முதுகுப்பின்னாலேயே சைலண்டாக வசூல் வேட்டை நடந்துள்ளது.
விஜய் ஒவ்வொரு வேட்பாளராக அறிவிக்க, அறிவிக்க அவர்களை தனியாக அழைத்து “சோசியல் மீடியாவில் உங்களுக்காக நாங்க பிரசாரம் செய்யுறோம்” எனக்கூறி தவெக ஐ.டி.விங்க் என்ற பெயரில் ஒவ்வொரு வேட்பாளர்களிடம் இருந்து கோடி, கோடியாய் சுருண்டியுள்ளது. ஆரம்பத்தில் ஆஹா... ஓஹோ என அவர்கள் கொடுத்த பில்டப்புகளையும், இதற்கு பின்னால் ஆதவ் அர்ஜூனாவும், நிர்மல் குமாரும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரிந்து தான் பணம் வசூலிக்கிறோம் என கொடுத்த வாக்குறுதியையும் நம்பி கோடிகளைக் கொட்டிக்கொடுத்த வேட்பாளர்கள் இன்று பேரதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக தனது வழக்கமான இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்ஸர்ஸ் டெக்னிக்கை தங்களிடமே காண்பித்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியில் உள்ளனர். தவெக வேட்பாளர்களுக்கு சாதகமாக அந்தந்த பகுதியைச் சேர்ந்த இன்ஃபுளூயன்ஸர்களை “அண்ணன், அக்கா எங்கள் தொகுதி வேட்பாளராக வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு?” என அளந்துவிட்டு சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் செய்துள்ளனர். ஒரே மாதிரியான ஷார்ட்ஸ் மற்றும் லோகோவுடன் தயாராகும் வீடியோக்கள் அனைத்து வேட்பாளர்களின் பக்கங்களிலும் பதிவிடப்பட்டுள்ளதை பார்த்தும் வேட்பாளர்கள் செம்ம ஷாக்கில் இருக்கிறார்களாம். இதற்காகவா கோடிகளை கொட்டிக் கொடுத்தோம் என அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வரை எதிர்த்து..! தவெக வி.எஸ்.பாபு வேட்பு மனுத் தாக்கல்..!!