வெள்ளியங்கிரி மலையின்3-வது மலையில் மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் சுயநினைவின்றி மீட்கப்பட்டுள்ளார். இன்று ஒரே நாளில் இரண்டு பக்தர்கள் மயக்கமடைந்ததால் சக பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி சாமி தரிசனம் செய்த சென்ற காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் இன்று காலை மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாசன் (47), என்ற பக்தர் சாமி தரிசனத்திற்காக மலை ஏறி உள்ளார்.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட 3-வது மலைப் பாதையில் உள்ள 'வாய்ச் சோலை' என்ற பகுதியில் அவர் திடீரெனச் சுயநினைவின்றிச் சாய்ந்து கிடப்பதாக இன்று மாலை 6.45 மணி அளவில் வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: வேட்பாளர்களிடம் வசூல் வேட்டை... இன்ஸ்டா புரோமோஷனுக்கு இவ்வளவா? - கோடி, கோடியாய் சுருட்டும் தவெக தலைமை “தலைகள்”...!!
தகவல் கிடைத்தவுடன் கோவை வனக்கோட்டத்தைச் சேர்ந்த வனப்பணியாளர்கள், டோலி தூக்கும் சுமைப் பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சீனிவாசனை மீட்ட மீட்புக் குழுவினர், அவரை டோலி மூலம் பாதுகாப்பாக பூண்டி அடிவாரம் நோக்கி வந்தனர் மேலும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சக பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பீடம்நேரியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார் என்ற இளைஞர் நேற்றிரவு நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய போது, திகாலை 2 மணியளவில் 5வது மலைப் பகுதியை எட்டிய போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். கோவையில் உள்ள சேரன் கல்லூரியில் மருந்தியல் துறையில் ஐந்தாம் ஆண்டு பயின்று வந்த 23 வயதே ஆன முகேஷ் குமாரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று இரண்டு பேர் அடுத்தடுத்து மயக்கம் அடைந்துள்ளது பக்தர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது
இதையும் படிங்க: “இன்று போய்... நாளை வா....” - தவெக வேட்பாளரை துரத்திவிட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி... நடந்தது என்ன?