கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் . அபோது பேசிய அவர், மதிமுக வின் 31ஆவது பொதுகுழு நாளை பெரியாரை வழங்கிய ஈரோட்டில் நடைபெற உள்ளதாகவும் அந்த பொதுக்குழுவில் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்த தேர்தலில் அதிகமான சீட்டுகள் கேட்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்று கேள்வி எழுப்பியதற்கு அது நாளை தீர்மானத்தில் அறிவிக்கப்பட்ட பின் தெரிந்து கொள்வீர்கள் என பதில் அளித்தார். ஆங்கில மொழி குறித்து அமித்ஷா பேசியது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், அவரது உளறல்களுக்கு எல்லையே இல்லை என்றும் ஆங்கிலம் உலக மொழி, ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வளரலாம் அதனால்தான் பேரறிஞர் அண்ணா தாய் தமிழும் ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என்று கூறியதாகவும், அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாநில மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று மாநிலங்கள்வையிலேயே அவர் பேசியதாகவும் தெரிவித்தார்.

திராவிட இயக்கம் இந்த தீர்மானத்தை முன்வைப்பதாகவும் அதனை மதிமுகவும் வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். அதே சமயம் பாஜகவிற்கு இதில் விருப்பமும் இல்லை இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாக இருப்பதாகவும் அதில் தோற்றுப் போவார்கள் என்றும் தெரிவித்தார். வருமானவரித்துறை அமலாக்கத்துறை மத்திய உளவுத்துறை ஆகியவற்றை இந்துத்துவாவை திணிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைப்பதாகவும், அதன் காரணமாகத்தான் அவர்கள் மீது எதிர்ப்புகள் வலுப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: டார்க்கெட் திருமா... விசிகவை மீண்டும், மீண்டும் உசுப்பேற்றும் நயினார்... ஆட்டம் காணுமா அறிவாலயம் கூட்டணி?

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து டிஆர்பி ராஜா கேலிச்சித்திரம் வரைந்ததாக எழுந்து வரும் புகார்கள் குறித்தான கேள்விக்கும், வெளியில் நடமாட முடியாது என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியது குறித்தான கேள்விக்கும் பதில் அளித்த வைகோ, வெளியில் நடமாட முடியாது என்று கூறுகின்ற அளவிற்கு வலிமையோ உரமோ இல்லாத கூட்டம் அவர்கள் என்றும் நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர், இந்த பொறுப்பிற்கு வந்த பிறகு பொருத்தமற்ற முறையில் கற்பனையாக சிலவற்றை பேசி வரும் இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி உதயகுமாருக்கு முன்பே நயினார் நாகேந்திரன் இதனை கூறியிருந்ததாக தெரிவித்தார். பாஜக உள்ளேயே பல்வேறு குழப்பங்களும் பிரச்சினைகளும் இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாமக கட்சி விவகாரம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர் பாமக ஒரு வலுவான கட்சி என்றும் தற்போது அங்கு நிலவி வருவது உட்கட்சி பிரச்சனை என்றும் கூறிய அவர் அதைப்பற்றி எந்த கருத்தையும் கூறுவதற்கு விரும்பவில்லை என தெரிவித்தார். மேலும் பாஜக யார் யாரையெல்லாம் அழைக்க முடியும் என்று நினைப்பதாகவும் அது போன்று நேரில் சென்று பேசுவதாகவும் தெரிவித்த அவர் ராமதாஸும் அன்புமணியும் அவரவர் கருத்துக்களை கூறி விட்டார்கள் தற்பொழுது தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதால் இரண்டு அணி போன்று தெரிகிறது காலப்போக்கில் அதனை எல்லாம் மாற்றிக் கொண்டு கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார். கூட்டணி குறித்து திமுக தலைமை தான் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்கிறதா? அவருக்கு யாரு சொன்னா? நயினார் கருத்துக்கு வன்னி அரசு பதிலடி!!