தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், முன்னணி நடிகருமான சி. ஜோசப் விஜய் சந்திரசேகர் மீது அவரது மனைவி சங்கீதா விஜய், செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரித் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரங்கள் தற்போது வெளியாகித் தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் இடையே நிலவி வந்ததாகக் கூறப்படும் விரிசல், தற்போது சட்ட ரீதியானப் போராட்டமாக மாறியுள்ளது.
2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருந்ததைச் சங்கீதா கண்டுபிடித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். விஜய் அந்த உறவை முடித்துக் கொள்வதாக உறுதியளித்த போதிலும், அதனைத் தொடர்ந்து வந்ததாகவும், இது தனக்குத் தாங்க முடியாத மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் மனுவில் கூறியுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் விஜய் தன்னை உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலுமாகப் புறக்கணித்துத் தனிமைப்படுத்தியதாகச் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் மன உளைச்சல், மனக்கசப்பு ஆகியவை தீவிரமடைந்ததால் விவாகரத்து கோரியிருப்பதாகத் தெரிகிறது. விவாகரத்து வழங்கக் கோருவதுடன், தற்போது வசித்து வரும் நீலாங்கரை இல்லத்தில் வசிக்கத் தனக்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது தகுதியான மாற்று இடத்தை செய்து தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தவெகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு, அக்கட்சியின் தொண்டர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!
கரூர் சம்பவம் மூலமாக தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்த அரசியல் கட்சிகள் தற்போது விஜயின் குடும்ப விவகாரத்தை கையில் எடுத்து விளையாட நினைப்பதாக தவெகவினர் கடும் கொந்தளிப்புடன் சோசியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். சங்கீதாவிற்கு 2021ம் ஆண்டே விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது தெரியும் என்றால் அப்போதே முடிவெடுக்காமல், சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள இந்த சமயத்தில் விவகாரத்து கேட்க வேண்டிய காரணம் என்ன என்றும், சங்கீதாவின் இந்த முடிவுக்குப் பின்னால் திமுக இருப்பதாகவும் குற்றச்சாட்டி வருகின்றனர்.
சிபிஐ-யை வைத்து முடக்க பார்த்த பாஜக, அதிமுகவும் இந்த கூட்டுசதியில் இணைந்திருப்பதாக கூறுகின்றனர். இதேபோல் லட்டு மாதிரி கிடைத்த விஜய் விவகாரத்து விவகாரத்தை திமுக, பாஜக, அதிமுகவினர் சோசியல் மீடியாக்களில் தவெக மீதான நெகட்டீவ் விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். “ஒரு கட்சி தலைவரே இப்படி இருந்தால் கட்சி எப்படி உருப்படும்?”, “மனைவி மற்றும் பிள்ளைகளையே நன்றாக வைத்துக்கொள்ள முடியாதவர் நாட்டை எப்படி காப்பாற்றுவார்” என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு தரமாக பதிலடி கொடுத்து வரும் தவெகவினர், “இது நடிகர், கட்சி தலைவர் என்பதை விட ஒரு நபரின் தனிப்பட்ட குடும்ப விஷயம். ஆனால் தேர்தல் ஆதாயத்துக்காக திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை பேசுவது வெட்கக்கேடானது” என அனைத்து கட்சியினருக்கும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். விஜயின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து மனுவின் பின்னணியில் அரசியல் சதி இருக்கலாம் என சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில், விஜயின் பெயருக்கு களங்கம் கற்பிப்பதற்காக தனிப்பட்ட குடும்ப பிரச்சனையை அரசியலாக்க பாஜகவும், திமுகவும் சதி செய்வதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். விவகாரத்து விவகாரத்தில் உண்மை முழுமையாக வெளியே வராத நிலையில், இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தவெக தலைவர் விஜய் தரப்பு தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இன்றைய தினம் தலைவர் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து, அவரின் மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு செய்தியாக பரப்பப்படுகிறது.
தவெக எழுச்சியை கண்டு அஞ்சும் திமுக ஆட்சி, தொடர்ந்து திசைதிருப்பும் அரசியலை மேற்கொண்டு வருகிறது.
•முதலில் கரூர் சம்பவம்
•பின்னர் SOP… pic.twitter.com/m9jfy12bGT
— TVK Abarna (@TVK_Abarna) February 27, 2026
இதையும் படிங்க: அந்த நடிகை பெயரை சொல்லட்டா? விஜய் - சங்கீதா விவாகரத்து... பரபரப்பு புகார்..!!!