விவசாயிகளிடம் நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்குவதாகப் பெறப்பட்ட நேரடிப் புகாரின் அடிப்படையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியரைத் தற்காலிகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்ய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் (DPC), தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, நெல் கொள்முதல் பணிகளின் தரம் மற்றும் விவசாயிகளுக்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் ஒரு பகுதியாக, அந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்ற விவசாயி ஒருவரைத் தனது மொபைல் போன் மூலமாக அமைச்சர் வெங்கடரமணன் நேரடியாகத் தொடர்புகொண்டு பேசினார். நெல் கொள்முதல் செய்வதில் ஏதேனும் சிரமங்கள் இருக்கிறதா என்று அமைச்சர் விசாரித்த போது, அந்த விவசாயி அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
இதையும் படிங்க: வாக்குப்பதிவு நிறைவு! தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலில் 400-க்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு!

ஐயா, இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு நெல் மூட்டையைக் கொள்முதல் செய்வதற்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தரப்பில் தலா 50 ரூபாய் லஞ்சம் கட்டாயமாக வாங்குகிறார்கள். பணம் கொடுத்தால் மட்டுமே நெல் மூட்டைகளை எடை போடுகிறார்கள்.
விவசாயியின் புகாரை போன் மூலமாகக் கேட்டறிந்த அமைச்சர் வெங்கடரமணன், அடுத்த நிமிடமே கடுமையான நடவடிக்கை எடுத்தார். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ், சம்பந்தப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யுமாறு அங்கிருந்த கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டார்.
அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நெல் கொண்டு வரும் விவசாயிகளை அலைக்கழிக்கக் கூடாது என்றும், ஒரு பைசா கூட லஞ்சமாகப் பெறக் கூடாது என்றும் தவெக அரசு ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனை மீறி விவசாயிகளிடம் கமிஷன் அல்லது லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இரக்கமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்" என இந்த ஆய்வின் போது அமைச்சர் வெங்கடரமணன் எச்சரித்தார்.
இதையும் படிங்க: "எந்த வடிவத்தில் வந்தாலும் விடமாட்டோம்!" - தொகுதி மறுவரையறைக்கு எதிராக திருச்சி சிவா திட்டவட்டம்!