சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் அவர்களின் வேட்பு மனுக்கள் இன்று முன்மொழியப்படுகிறது. ஒரு ராஜ்யசபா வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்துட்டு முன்மொழிகின்றனர்.

அதன்படி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோரின் வேட்பு மனுக்கள் இன்று முன்னொழியப்படுகிறது. இந்த வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்ட பிறகு திமுக சார்பில் நான்கு எம்பிக்களும், அதிமுக சார்பில் இரண்டு எம்பிக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க: ஸ்டாலின் சாரே நினைத்தாலும் அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் சரமாரி அட்டாக்..!

இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உள்ளார்.
இதையும் படிங்க: ரெண்டு சீட்டுக்கு 20 பேர் நெருக்கடி! இடியாப்ப சிக்கலில் அதிமுக... திணறும் இபிஎஸ்!