பாமகவில் ராமதாஸ் அவரது மகன் அன்புமணி இடையேயான மோதல் என்பது முற்று பெறவில்லை. தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நீருபூத்த நெருப்பாக இருவருக்கு இடையேயான மோதல் தொடர்கிறது என்பதைத்தான் இன்று காலை முதல் நடைபெறக்கூடிய சம்பவங்கள் உணர்த்துகின்றன தொடர்ச்சியாக கட்சியில் இருக்கக்கூடிய பல்வேறு நிர்வாகிகளை நீக்கம் செய்து பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டுருக்கிறார்.

அவர்களுக்கு உடனடியாக அன்புமணி ராமதாஸ் மீண்டும் அந்த பதவியை அறிவித்து வருகிறார். முதன் முதலில் பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை ராமதாஸ் நீக்கினார். அதனை எதிர்க்கும் வகையிலும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் திலகபாமாக பொருளாளராக தொடர்வதாகவும், அவருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அன்புமணி கட்டளையிட்டார்.

இப்படி அன்புமணி ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்குவதும், அவர்கள் அதே பதவியில் நீடிப்பதாக தலைவர் அன்புமணி அறிவிப்பதும் பாமகவில் தொடர்கதையாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று பாமக தொண்டர்களே அதிர்ச்சி அடையும் வகையில், கட்சியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாகியாக பார்க்கப்படக்கூடிய வழக்கறிஞர் பாலுவின் பதவியை ராமதாஸ் பறித்தார்.
இதையும் படிங்க: கட்சிப் பணியில் தீவிரம் காட்டும் அன்புமணி.. வரும் 15ம் தேதி முதல் பொதுக்குழு கூட்டம்..!
பாமகவில் வழக்கறிஞர் சமூகநீதி பேரவை என்ற ஒரு அமைப்பு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினுடைய தலைவராக வழக்கறிஞர் பாலு பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து வழக்கறிஞர் பாலு நீக்கம் செய்யப்பட்டு வழக்கறிஞர் கோபு என்பவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அன்புமணியின் தீவிர ஆதரவாளரான வழக்கறிஞர் பாலுவின் நீக்கம் பாமகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எப்படியும் அன்புமணி அவருக்கு மீண்டும் பதவி வழங்கிவிடுவார் என அனைவரும் காத்திருந்த நிலையில், அதில் புது ட்விஸ்ட் வெளியாகியுள்ளது. சமூக நீதி பேரவை பாமக கட்சிக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்பதால் அங்கு அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக நீதி பேரவை என்பது பாமகவிற்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்பு என்பதால் பாமக தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி மீண்டும் பாலுவுக்கு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவர் ராமதாஸ் தான் சமூகநீதி பேரவையுடைய நிறுவனர் என்பதால் அவருக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது. எனவே பாலுவை நீக்கிய ராமதாஸின் உத்தரவு செல்லுபடியாகும் என்பதும் உறுதியாகியுள்ளது. கட்சி பதவியில் மருத்துவர் ராமதாஸ் யாரை நீக்கினாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் மீண்டும் அவர்களுக்கு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில் கே பாலுவை சமூகநிதி பேரவையின் தலைவர் பதவியிலிருந்து நீக்கிய பிறகு அவரால் மீண்டும் பாலுவுக்கு பதவி கொடுக்க முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருப்பதாக பாமகவுடைய மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் கடலூரில் கை வைத்த ராமதாஸ்.. அன்புமணிக்கு விழுந்த அடுத்த அடி..!