2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். பாமக 2 துருவங்களாக பிரிந்த நிலையில் ராமதாசும், அன்புமணியும் தனித்தனியாக கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும் உள்ளிட்ட 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்க பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வரும் 25-ஆம் தேதி முதல் பயணம் மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். அந்த பயணம் தொடர்பான முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான உரிமை, வன்முறையில்லா மாநிலம், வளர்ச்சிக்கான உரிமை மீட்பு, நல்லாட்சி & அடிப்படை சேவைகளுக்கான உரிமை, மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை, ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பன தான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பசுமைத் தாயகம் நாளாக சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கட்சி கட்டுப்பாட்டு மீறல்! பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சஸ்பெண்ட்! ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, சோளிங்கர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: சமூக நீதி பற்றி திமுக பேசலாமா? வன்னியர்களுக்கு துரோகம் செஞ்சுட்டாங்க! அன்புமணி ஆவேசம்…