ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு கட்சி பதவி கொடுத்ததில் இருந்து அன்புமணிக்கும் ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது. இன்று வரை பிரச்சனை ஓயாத நிலையில் கட்சியை இருவரும் இரு பிரிவுகளாக பிரித்துக் கொண்டுள்ளனர். ராமதாஸ் தரப்பு, அன்புமணி தரப்பு என்று பிரிந்து தனித்தனியாக செயற்குழு கூட்டங்கள், பொதுக்குழு கூட்டங்கள், நடைபயணம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணி தான் என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கட்சியின் தலைவர் யார் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர். முகுந்தனுக்கு கட்சிப் பதவி கொடுத்ததில் பிரச்சனை தொடங்கிய நிலையில், ராமதாசின் மகளும், முகுந்தனின் தாயாருமான ஸ்ரீகாந்தி செயற்குழுவில் இடம் பெற்று இருப்பது மேலும் இந்த விவகாரத்தை தூண்டி உள்ளது. அன்புமணி மீது பதினாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதற்கு அன்புமணி தரப்பில் எந்த விதமான பதிலும் அளிக்கப்படாத நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிக்கை தயாரிக்கப்பட்டது. நோட்டீசுக்கு இதுவரை அன்புமணி பதிலளிக்காத நிலையில் வரும் பத்தாம் தேதி வரை மேலும் அவகாசம் அவருக்கு வழங்கப்பட்டது. அதுு மட்டும் அலலாமல் பதிலளிக்க தவறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரும் 10ம் தேதி வரைக்கும்தான் டைம்! மீண்டும் அன்புமணிக்கு கெடு விதித்த ராமதாஸ்..!
இந்த பிரச்சனை நீண்டு கொண்டிருக்கும் சமயத்தில் விரைவில் நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அறிவிக்கப்படும் என அன்புமணி தெரிவித்துள்ளார். சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்றும் என்னும் நான்கு மாதங்கள் தான் அதற்குமே நம்முடைய ஆட்சி என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அவ்ளோதான் முடிச்சு விட்டாங்க! உறுப்பினர் அட்டையிலிருந்து அன்புமணி புகைப்படம் நீக்கம்… பாமகவில் சர்ச்சை