முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளராக களம் காணும் மருத்துவர் செந்தில்குமாருக்கு அவர் ஆதரவு திரட்டி வருகிறார்.
வர உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டிடக்கூடிய திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் அவருடைய பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று, அந்தந்த தொகுதிகளின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து மக்களிடமிருந்து கேட்டறிந்து வருகிறார்.
பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு சமூகத்தினரையும் சந்தித்து, அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். பல இடங்களில் முதலமைச்சரின் நடைபயணங்களுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்களை பற்றி யோசிக்க டைம் இல்ல.. ஆனா IPL பார்க்கும் முதல்வர் நாட்டுக்கு தேவையா..?? இபிஎஸ் கேள்வி..!!
இன்று காலை தர்மபுரியில் இருக்கக்கூடிய பாலக்கோடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர். அப்பகுதியில் இருந்த மக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அந்த கடிதத்தை வெளியிட தயாரா? - நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!