சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.
இந்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிதி நிறுவனத்துக்கு எதிராக சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பணபலம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால் ஜாமீன் கொடுத்தால் மக்களுக்கு பணம் கிடைக்காது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி கூறினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், இந்த வழக்கின் விசாரணைக்கு தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மனுதாரர்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் தேவநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்ற காவல்துறை என் வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்தார்.
இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகன் வழக்கில் உத்தரவு… என்னென்ன புகார்கள்?.. தணிக்கை குழுவுக்கு செக் வைத்த நீதிமன்றம்..!
நிதி மோசடி வழக்கில் கைதாகி உள்ள தேவநாதன் யாதவியின் அனைத்து சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 100 கோடி ரூபாயை செலுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு தேவநாதன் மனு தாக்கல் செய்தார். அப்போது, சொத்துகளை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்க தயாராக இருக்கிறேன் என மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "ஜனநாயகன்"... தணிக்கை சான்றிதழ் தாமதம்... உயர் நீதிமன்றத்தில் வழக்கு...!