சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடி மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உட்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கெனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.
இந்த நிலையில், தேவநாதன் யாதவ், குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நிதி நிறுவனத்துக்கு எதிராக சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாகவும், பணபலம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால் ஜாமீன் கொடுத்தால் மக்களுக்கு பணம் கிடைக்காது என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி கூறினார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், இந்த வழக்கின் விசாரணைக்கு தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மனுதாரர்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தெரிவித்து இருந்தார்.இந்த நிலையில் தேவநாதன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அதுவும் இதுவும் ஒன்னு இல்ல! தவெக கொடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்ற காவல்துறை என் வாதத்தை ஏற்க நீதிபதி மறுத்தார். நிதி மோசடி வழக்கில் கைதாகி உள்ள தேவநாதன் யாதவியின் அனைத்து சொத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 6 வார காலம் இடைக்கால ஜாமின் வழங்குமாறு, தேவநாதன் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது குறித்து வரும் 25ம் தேதி முடிவு செய்யப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: விசாரணைக்கு வாங்க... ஜெகத்ரட்சகனுக்கு எதிரான ED நோட்டீஸுக்கு சுப்ரீம் கோர்ட் தடை!