மதுரை மாவட்டம் உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பொது குழு கூட்டத்தில் புதிய அறிவிப்புகள் வெளியானது. புதிய அணிகள் உருவாக்கப்பட்டது எடுத்து திமுகவில் உள்ள அணிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

மாற்றுத்திறனாளி தொண்டர்களுக்காக திமுகவில் புதிய சார்பு அணி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள், பேராசிரியர்களை கொண்டு கல்வியாளர் அணி என்ற ஒரு புதிய அணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போட்டோஷூட்- னா FULL MAKEUP ல வந்துடுவாரு... கூச்சமே இல்லையா? முதல்வர் மீது அதிமுக கடும் தாக்கு!

இந்த முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மன்மோகன் சிங், போப் ஆண்டவர், இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் உள்ளிட்ட தலைவர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் மறைவுக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி! முதல்வர் ஸ்டாலின் உறுதி...