அண்மையில் காலமான தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான திரு. கே. ராஜன் அவர்களின் பௌதிக உடலுக்கு, முன்னாள் துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை டி.நகரில் உள்ள மறைந்த தயாரிப்பாளர் கே. ராஜன் அவர்களின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நேரில் வருகை தந்த திமுக இளைஞரணி செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மறைந்த கே. ராஜன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை சாத்தி, தங்களது அஞ்சலியைச் செலுத்தினார். அதன் பின்னர், கே. ராஜன் அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துக் கைகளைப் பற்றிப் பிடித்து, தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.

அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்த் திரைப்படத் துறையில் சிறு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் சினிமாவின் ஆரோக்கியமான போக்கு குறித்தும் எவ்வித அச்சமுமின்றி மேடைகளில் துணிச்சலுடன் தனது கருத்துகளைப் பதிவு செய்த மாபெரும் ஆளுமை திரு. கே. ராஜன் அவர்கள். அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரைத்துறைக்கும், குறிப்பாக நடுத்தர மற்றும் சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்று நெகிழ்ச்சியோடு புகழாரம் சூட்டினார். கே. ராஜன் அவர்களின் மறைவுக்கு ஏற்கனவே தமிழக முதலமைச்சர் விஜய் இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருப்பது திரையுலகினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் விஜய் அலை!! திணறும் திமுக! சரிவிலிருந்து மீள நடைபயணம் திட்டமிடும் உதயநிதி ஸ்டாலின்!
இதையும் படிங்க: வீதி வீதியாக சென்று நன்றி: சேப்பாக்கம் மக்களிடையே உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!