தமிழ்நாட்டின் உரிமைக்காக டெல்லி சென்றேன் என முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டுக்கான நிதி'க்காகவா இல்லை உங்கள் குடும்ப உறுப்பினர் நிதி'-க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதற்காண உண்மை பதில் என்ன என சொல்ல முடியுமா?. ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்க்கு பில்டப் செய்கிறீர்களே?

உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள 'நிதி'களையும், அவர்களுக்கு துணையான 'தம்பி'களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல- உங்கள் ஆட்சியின் ஊழலுக்காண தண்டனையில் இருந்து யாரும் உங்களை காப்பாற்ற முடியாது. உங்கள் வீட்டுத் 'தம்பி' ஆவதற்கு முன் ரத்தீஷ் யார்? அவரிடம் என்ன சொத்து இருந்தது? என்ன தொழில் செய்தார்? எவ்வளவு லாபம் பார்த்தார்?
இதையும் படிங்க: புலம்பாதீங்க ஸ்டாலின்.. யாரும் உங்களை காப்பாற்ற முடியாது! முதலமைச்சருக்கு இபிஎஸ் வார்னிங்..!

இன்று ரத்தீஷ் மற்றும் அவரைச் சார்ந்தோரின் சொத்து மதிப்பு என்ன? எத்தனை கம்பெனிகள் வைத்துள்ளனர்? இதையெல்லாம் நேரடியாகப் பேச நீங்கள் பேச தயாரா?. இத்தனை நாட்கள் உங்கள் அமைச்சர்கள் கதறியது போதாதென்று, இப்போது நீங்களே களத்தில் இறங்கிக் கதறுவதை நான் மட்டுமல்ல் தமிழ்நாட்டு மக்களும் ரசித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நானும் டில்லிக்கு போனேன். நானும் தலைவர் தான் என்று இத்தோடு 5 முறை புலம்பித் தள்ளிவிட்டீர்கள் முதல்வர் ஸ்டாலின். போதும். மூன்று ஆண்டுகள் நிடி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்? தமிழகத்துக்கான ''நிதி”க்காகவா இல்லை. உங்கள் குடும்ப உறுப்பினர் ''நிதி”க்காகவா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?
அதற்க்கான உண்மை பதில் என்ன? ஏதோ டில்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழகத்திற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே? எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக நீர் வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில் மாநகராட்சியின் செயல்பாடுகள் முழுமையாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் நீர் வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை மற்றும் பல பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். இன்னும் மூன்று மாதத்தில் கூடி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விவாதிப்போம். மேட்டூர் அணையிலிருந்து ஜுன் மாதம் பாசனத்திற்காக கண்டிப்பாக கட்டாயம் நீர் திறக்கபடும். மாநகராட்சியில் குப்பை சேர்கிறது அதனை எங்கே கொட்டுவது என்பது தான் பெரிய பிரச்சணையாக உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் சேரும் குப்பை கொட்ட இடம் இல்லை. அவற்றை எல்லாம் எங்கே கொட்டுவது என்பது தான் பிரச்னை.

முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பயங்கரமான நிபந்தனைகளை விதித்துள்ளனர். உடனடியாக 7 மரங்களை வேண்டும், பேபி அணை கட்ட வேண்டும் பராமரிப்பு பணிக்காக பொருட்களை எடுத்து செல்லும் போது கேரள அரசு எந்த தடங்களும் தடையும் செய்ய கூடாது. தமிழக அரசு பணிகளையும் துவங்கியுள்ளோம் என்றார். தென்பென்னையில் கர்நாடகா ரசாயன கழிவுகள் கலப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதை போல் குப்பையை கொட்டுபவன் எல்லாம் எங்களின் ஆற்றில் தான் கொட்டுகிறான் என்றார்.

எடப்பாடி பழனிசாமி நானும் தலைவர் என முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றார். அவர் குடும்ப நிதியை வாங்க சென்றார். ஊழலுக்கு முறையான தண்டனையை திமுக அனுபவிக்கும் என கூறியது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தவர். ஒரு கட்சிக்கு தலைவர். எதிர்க்கட்சி தலைவர் இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறுவார் என நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆமாம் கொடநாடு வரையில் எங்கள் கேஸ்தான் நடக்கிறது. நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களில் இயங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கபடும் என கூறினார்.
இதையும் படிங்க: டெல்லி எஜமானுக்கு பணிந்த பயந்தாங்கொள்ளி பழனிசாமி..! லெப்ட் ரைட் வாங்கிய சேகர்பாபு..!