மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சத்திரப்பட்டி காவல் நிலையத்தை கொலை குற்றவாளி பிரபாகரன் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சூறையாடினார். காவல் நிலையத்தை பார்வையிட்டு நிலைமை குறித்து ஆராயச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தனது கடுமையான கண்டனங்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிவு செய்துள்ளார்.

திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு இல்லை என்றும் காவல் நிலையத்தையே காக்க முடியாது இந்த பொம்மை முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களை எப்படி காக்கப் போகிறார் எனவும் கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, மக்களைக் காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை, தற்போது உச்சத்தின் உச்சமாக காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை என்றும் நான்காண்டு ஆட்சியின் சாதனைப் பட்டியலில் முதலில் சேர்க்க வேண்டிய சாதனை இதுதான் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நான் போலி விவசாயியா? சொல்லுற தகுதி உங்களுக்கு இல்ல ஸ்டாலின்..! இபிஎஸ் தாக்கு...

முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா பொம்மை முதல்வரே என்றும் காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்., வாய்ப்பே இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.

V.சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம்தான் பாதுகாப்பு என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அப்ப சேலம்.. இப்போ சென்னை.. எடப்பாடி பழனிசாமிக்கு சோதனை மேல் சோதனை..!